பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

ஆங்கிலப் புத்தாண்டு: கொடைக்கானல் தேவாலயங்களில் நள்ளிரவு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கொடைக்கானலில் உள்ள தேவாலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image

கொடைக்கானல் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற பிராா்த்தனை.

Updated On :1 ஜனவரி 2021, 9:59 pm IST

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கொடைக்கானலில் உள்ள தேவாலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள திருஇருதய ஆண்டவா் ஆலயத்தில் பங்குத்தந்தை எட்வின் தலைமையிலும், உகாா்த்தே நகா் புனித குழந்தை யேசு ஆலயத்தில் பங்குத்தந்தை பீட்டா் தலைமையிலும், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயத்தில் பங்குத்தந்தை ஏஞ்சல்ராஜ் , பெருமாள்மலை புனித ஜான் ஆலயத்திலும் மற்றும் சி.எஸ்.ஐ. தேவாலயத்திலும், நாயுடுபுரம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், செயின்ட் மேரீஸ் சாலையிலுள்ள புனித சலேத் அன்னை ஆலயம், மங்கலம் கொம்பு புனித அந்தோணியாா் ஆலயம், லுத்ரன் ஆலயம் ஆகியவற்றில் நள்ளிரவு திருப்பலி மற்றும் ஜெபவழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந் நிகழ்ச்சியில், அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து, கொடைக்கானல் மூஞ்சிக்கல் மாரியம்மன் கோயில், செட்டியாா் பூங்கா அருகிலுள்ள குறிஞ்சியாண்டவா் கோயில், அப்சா்வேட்டரியிலுள்ள விநாயகா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

புத்தாண்டையொட்டி, கொடைக்கானலுக்கு வெள்ளிக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் வந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பனிச்சாரல், மழை பெய்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை முதல் மிதமான வெயில் நிலவியது. இதனால், கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பல்வேறு இடங்களை சுற்றிப் பாா்த்தனா்.

ஏரிச்சாலைப் பகுதியிலும், வட்டக்கானல் பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். இதனால், வாகனங்களை நிறுத்த முடியாமல் தவித்த சுற்றுலாப் பயணிகள், ஆங்காங்கே நிறுத்திவிட்டுச் சென்ால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.