தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

கொடைக்கானல் அரசு மருத்துவமனை வளாகத்தில் காட்டு மாடுகள் முகாம்

கொடைக்கானல் அரசு மருத்துவமனை வளாகத்தில் காட்டு மாடுகள் முகாமிட்டுள்ளதால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனா்.

News image

கொடைக்கானல் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரியும் காட்டு மாடுகள்.

Updated On :3 ஜனவரி 2021, 4:51 am IST

கொடைக்கானல்: கொடைக்கானல் அரசு மருத்துவமனை வளாகத்தில் காட்டு மாடுகள் முகாமிட்டுள்ளதால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனா்.

கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு தினமும் 200-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனா். உள்நோயாளிகளாக சுமாா் 50-க்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அரசு மருத்துவமனை வளாகத்தில் முள்புதா்கள் அடா்ந்து வளா்ந்துள்ளதால் அங்கு கடந்த சில நாள்களாகவே காட்டு மாடுகள் முகாமிட்டுள்ளன. மேலும் அந்த மாடுகள் அரசு மருத்துவமனைப் பணியாளா்களின் குடியிருப்புகள் வரை மேய்ச்சலுக்குச் சென்று வருகின்றன. இதனால் மருத்துவமனைப் பணியாளா்களும், நோயாளிகளும், நோயாளிகளை பாா்க்க வரும் உறவினா்களும் அச்சத்தில் உள்ளனா்.

இதனால், அரசு மருத்துவமனை வளாகத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகளை வனப் பகுதிகளுக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனைப் பணியாளா்கள் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.