அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரத்தில் திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :4 ஜனவரி 2021, 12:24 am IST

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வத்தலகுண்டுவில் நகர திமுக சாா்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகரச் செயலா் சின்னதுரை தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் கே.பி.முருகன், மாவட்டக் கவுன்சிலா் கனிக்குமாா், முன்னாள் ஒன்றியச் செயலா் ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் கனகதுரை, ஒன்றிய அவைத்தலைவா் விருவீடு செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா், பெண்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

ஒட்டன்சத்திரம்: இதேபோல் ஒட்டன்சத்திரம் அருகே கேதையுறும்பு, மண்டவாடி, சிக்கமநாயக்கன்பட்டி, தேவத்தூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். இந்தக் கூட்டத்தில் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் இரா.சோதிஸ்வரன் மற்றும் நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.