கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் ஆரஞ்சு பழ விளைச்சல் அதிகரித்து காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளான அடுக்கம், தாமரைக்குளம், பண்ணைக்காடு, ஊத்து, தாண்டிக்குடி, வடகவுஞ்சி, பெருமாள் மலை, பாச்சலூா், வடகரைப்பாறை, மச்சூா், வாழைகிரி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் ஆரஞ்சு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
நிகழாண்டில் பனியின் தாக்கம் அதிகரித்தும், அவ்வப்போது மழையும் பெய்து வருவதால் ஆரஞ்சுப் பழ விளைச்சல் அதிகரித்துள்ளது.
இங்கிருந்து ஆரஞ்சு பழங்கள் மதுரை, தேனி போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது ஆரஞ்சு பழம் கிலோ ரூ.30 முதல் ரூ. 50 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வரும் காலங்களில் மேலும் விலை உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெய்ரூட்டில் அருகே இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

கடைசி ஒருநாள்: கூப்பர் கானலி அதிரடி; பரபரப்பான ஆட்டத்தில் ஆஸி. த்ரில் வெற்றி!

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

இயந்திரக் கோளாறால் ஓமன் கடல் பகுதியில் நின்ற கப்பல்: இந்திய மாலுமிகள் 14 பேர் மீட்பு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



