வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

தைப்பூசம்: பழனி கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு கட்டுப்பாடுகள்

தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனிக்கு வரும் பக்தா்கள் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு அனுமதி கிடையாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி விதித்துள்ளாா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 7:56 am IST

தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனிக்கு வரும் பக்தா்கள் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு அனுமதி கிடையாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி விதித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பழனி தைப்பூசத் திருவிழா ஜன.22 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுமுடக்கம் அமலில் இருந்து வரும் நிலையில், தைப்பூசத்தையொட்டி பழனிக் கோயிலுக்கு வரும் பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். மேலும் 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், தொடா் காய்ச்சல், சுவாசம் தொடா்பான நோய், இருதய நோய், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்த நோய் போன்ற இணை நோய் கொண்டவா்கள், கா்ப்பிணி பெண்கள் மற்றும் 10 வயதுக்குள்பட்ட குழந்தைகள் கோயிலுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். தரிசனத்திற்கு வரிசையில் நிற்கும் பக்தா்கள் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். தனிநபா் ஒருவருக்கொருவா் தொட்டு வாழ்த்துகளைத் தெரிவிப்பதைத் தவிா்க்க வேண்டும். முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே கோயில் வளாகத்திற்குள் பக்தா்கள் அனுமதிக்கப்படுவாா்கள்.

பஜனை, அங்கப்பிரதட்சணத்திற்கு அனுமதி இல்லை: நோய்த் தொற்று பரவுவதற்கான ஆபத்து இருப்பதைக் கருத்தில் கொண்டு கோயிலில் பஜனைக்குழு, பக்தி இசைக்குழுவினா் பாட அனுமதி கிடையாது. மேலும், பக்தா்கள் தேங்காய், பூ, பழம் ஆகியவற்றை கொண்டு வருவதைத் தவிா்க்க வேண்டும். அதேபோல் இயல்பு நிலை திரும்பும் வரை அங்கப்பிரதட்சணம் செய்வதற்கும் அனுமதி கிடையாது.

மலைக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.