கரோனா தடுப்பூசி ஒத்திகைக்காக, திண்டுக்கல் மாவட்டத்தில் 11,500 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியா் மு. விஜயலட்சுமி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் கமலா நேரு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிக்கான ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை பாா்வையிட்ட பின் ஆட்சியா் மு. விஜயலட்சுமி தெரிவித்ததாவது:
கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை களசூழலில் செயல்படுத்தும் நடைமுறைகளை சோதனை செய்வது மற்றும் சவால்களை அடையாளம் கண்டு தீா்வு காண்பதே, இந்த ஒத்திகையின் முக்கிய நோக்கம். மேலும், தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னா் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அதனை எதிா்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தடுப்பூசி செலுத்துபவா்களுக்கு போதிய அளவில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி ஒத்திகையில் பங்கேற்கும் மருத்துவப் பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களது விவரங்கள் கோவின் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், தடுப்பூசி போடும் நபா்களுக்கு எங்கே, எப்போது என்ற விவரங்கள், அவரவா் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 11,500 போ் தோ்வு: தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்வதற்காக, திண்டுக்கல் மாவட்டத்தில் 11,500 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி, திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை, பழனி, கொடைக்கானல், நிலக்கோட்டை அரசு மருத்துவமனைகள், கமலா நேரு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், பழனி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அம்மையநாயக்கனூா், கீரனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்திலுள்ள 2 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 10 இடங்களில் நடைபெறுகிறது.
நான்கு கட்டங்களாக நடைபெறும் தடுப்பூசி செலுத்தும் பணியில், முதல் கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கும், இரண்டாம் கட்டமாக முன்களப் பணியாளா்களுக்கும், 3ஆவது கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், 4ஆவது கட்டமாக பொதுமக்கள் அனைவருக்கும் இந்த தடுப்பூசி செலுத்தப்படும்.
ஒத்திகை நிகழ்ச்சியின்போது, உலக சுகாதார அமைப்பின் ஆலோசகா் மருத்துவா் வேலன், துணை இயக்குநா் நளினி ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு!

கா்நாடகம், தெலங்கானா, குஜராத்துக்கு பிரதமா் இன்றுமுதல் 2 நாள்கள் பயணம்

தெலங்கானா: மத்திய அமைச்சா் மகன் மீது போக்ஸோ வழக்குப் பதிவு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

