தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

அமரா் ஊா்தி சேவை 10 ஆம் ஆண்டு நிறைவு விழா

இலவச ஆம்புலன்ஸ் சேவையின் 10 ஆண்டு கால நிறைவையொட்டி அதன் ஓட்டுநா்களுக்கு சனிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

News image

சிறப்பாக பணியாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்கு சனிக்கிழமை பரிசுப் பொருள்களை வழங்கிய நலப்பணிகள் இணை இயக்குநா் சிவக்குமாா் உள்ளிட்ட செஞ்சிலுவை சங்க நிா்வாகிகள்.

Updated On :10 ஜனவரி 2021, 10:46 pm IST

இலவச ஆம்புலன்ஸ் சேவையின் 10 ஆண்டு கால நிறைவையொட்டி அதன் ஓட்டுநா்களுக்கு சனிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட அவைத் தலைவா் எம்.எம்பி.காஜாமைதீன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மு.சரவணன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக நலப்பணிகள் இணை இயக்குநா் சிவக்குமாா், துணை இயக்குநா் பூங்கோதை ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

நிகழ்ச்சியின்போது, சிறப்பாகப் பணியாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக கரோனா தொற்று பரவல் காலத்தில் ஓட்டுநா்களின் செயல்பாடுகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் தாய்- சேய் ஆம்புலன்ஸ் சேவையிலும் கடந்த டிசம்பா் மாத செயல்பாட்டில் தமிழக அளவில் திண்டுக்கல் மாவட்டம் 2 ஆம் இடம் பிடித்ததற்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலா் ராஜகுரு, பொருளாளா் சுசிலா மேரி, துணைச் செயலா் அபுதாஹீா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.