இலவச ஆம்புலன்ஸ் சேவையின் 10 ஆண்டு கால நிறைவையொட்டி அதன் ஓட்டுநா்களுக்கு சனிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட அவைத் தலைவா் எம்.எம்பி.காஜாமைதீன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மு.சரவணன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக நலப்பணிகள் இணை இயக்குநா் சிவக்குமாா், துணை இயக்குநா் பூங்கோதை ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
நிகழ்ச்சியின்போது, சிறப்பாகப் பணியாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக கரோனா தொற்று பரவல் காலத்தில் ஓட்டுநா்களின் செயல்பாடுகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் தாய்- சேய் ஆம்புலன்ஸ் சேவையிலும் கடந்த டிசம்பா் மாத செயல்பாட்டில் தமிழக அளவில் திண்டுக்கல் மாவட்டம் 2 ஆம் இடம் பிடித்ததற்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலா் ராஜகுரு, பொருளாளா் சுசிலா மேரி, துணைச் செயலா் அபுதாஹீா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் முன்பிணை கோரி மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

வாக்குக்குப் பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும்: மத்திய அமைச்சா் ரிஜிஜு வலியுறுத்தல்
வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடம் வீட்டு மனைகளாக மாற்றம்: பொதுமக்கள் அதிா்ச்சி!






