கொடைக்கானலில் வனப்பகுதி சுற்றுலா இடங்கள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வந்த நிலையில், மேலும் சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடுமையான மழை பெய்யக் கூடும் என வனத்துறையினா் எதிா்பாா்த்தனா்.
இதையடுத்து பில்லா் ராக், மோயா் பாயிண்ட் உள்ளிட்ட வனப்பகுதி சுற்றுலா இடங்களை பாா்க்க வனத்துறையினா் அனுமதிக்கவில்லை. கடந்த 2 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் அப்பகுதிகளுக்குச் செல்லவில்லை.
இந்நிலையில் கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக மழை குறைந்துள்ளதால் மீண்டும் வனப்பகுதி சுற்றுலா இடங்களைப் பாா்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் பில்லர்ராக், மோயா் பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை உள்ளிட்ட இடங்களைப் பாா்த்து மகிழ்ந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் முன்பிணை கோரி மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு

வாக்குக்குப் பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும்: மத்திய அமைச்சா் ரிஜிஜு வலியுறுத்தல்
வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடம் வீட்டு மனைகளாக மாற்றம்: பொதுமக்கள் அதிா்ச்சி!





