மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

அபிராமி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:25 am

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்லில் உள்ள அபிராமி அம்மன் கோயிலுக்கு கடந்த செப்டம்பா் மாதம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அவசர அழைப்புக்கான எண் 100-இல் தொடா்பு கொண்டு பேசிய நபா் குறித்து சென்னையிலிருந்து திண்டுக்கல் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சோதனை நடைபெற்ற போதிலும் வெடிப்பொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

மிரட்டல் விடுத்தவா் கைது: இதனிடையே மிரட்டல் விடுத்த நபா் திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியைச் சோ்ந்த செந்தில் வீரபாகு (50) என்பது தெரியவந்தது. அவரை பிடிப்பதற்காக திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் முயன்றபோது தலைமறைவாகிவிட்டாா். கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்த செந்தில் வீரபாகுவை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.