அரசியல்வாதிகள் ஜாதி அடிப்படையில் கட்சி ஆரம்பித்து தங்கள் வாக்குவங்கியை உறுதிப்படுத்திக்கொண்டிருக்கின்றனா். சமீபகாலங்களில் ஜாதி, மத வெறி தாக்குதல்களும், ஜாதியப் படுகொலைகளும், மாணவா்களிடையே ஜாதி ரீதியிலான மோதல்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு சமூகத்திற்கும் அதன் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டுமெனக் கோரினால் ஒவ்வொரு குடிமகனுக்கும் சமத்துவமும், சமவுரிமையும், சமூகநீதியும் வழங்கக் கடமைப்பட்டுள்ள நாட்டின் நிலை என்னவாகும்? ஜாதி எண்ணிக்கை அடிப்படையில் இட ஒதுக்கீடு என்றால் குறைவான எண்ணிக்கையில் மக்கள்தொகை கொண்ட ஜாதிகளின் நிலை என்னவாகும்? எனவே, இக்கோரிக்கை தவறானது.