அதுவும் இப்போது மாநில அளவிலான தேர்வு நடத்தப்பட்டு அதில் சிறப்பு மதிப்பெண்கள் பெறுபவர்களே அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தரமான ஆசிரியர்கள் அரசுப் பள்ளிக்குக் கிடைத்து வருகின்றனர். ஆனால், அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளிலோ, பெயரளவுக்குத் தேர்வு நடத்தப்படுவதாகவும், மற்றபடி லகரங்களை யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களைத்தான் பள்ளி நிர்வாகங்கள் பணிக்குத் தேர்வு செய்வதாகவும், இதில் பள்ளியின் செயலர் முடிவுதான் இறுதி என்பதால், அவரை சரிக்கட்டுபவருக்குதான் பணி கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.