கலப்பட வணிகம், லஞ்ச ஊழல் என்னும் முறையில் பல பேரின் சாவுக்குக் காரணமாகிற குற்றங்கள் ஒருபுறமிருக்க, பாலியல் எனக் கொண்டாலும் காதலித்துக் கர்ப்பமாக்கிக் கைவிடுதலும், காதலித்துக் கலியாணம் செய்து, குழந்தைகளும் பெற்ற பின்னர் அவளைக் கைவிட்டு மற்றொருத்தியுடன், மற்றவன் மனைவியுடன் வாழ்தலும், மணமானவன் எனத் தெரிந்தும் அவனைக் காதலித்து, இரகசியத் திருமணம் செய்து, முறைப்படி மணந்தவளைக் குழந்தைகளுடன் தவிக்க விடுதலும், கணவனையும் அவனுக்குப் பிறந்த குழந்தைகளையும் விட்டு, இன்னொருத்தியின் கணவனுடன் குடும்பம் நடத்துதலும், கணவன் மனைவியின் முறை பிறழ்வும் சாதாரணக் குற்றங்களா?