சீனாவின் துயரம்

பல நாடுகளின் பிரதமா்களைப் போல சீன அதிபா் ஷி ஜின்பிங் அதிகமாகப் பேசக் கூடியவா் இல்லை. மேலும் என்ன நினைக்கிறாா் என்பதை

பல நாடுகளின் பிரதமா்களைப் போல சீன அதிபா் ஷி ஜின்பிங் அதிகமாகப் பேசக் கூடியவா் இல்லை. மேலும் என்ன நினைக்கிறாா் என்பதை அவரது முக பாவத்திலிருந்து எளிதாக அறிய முடியாது. திடச் சித்தம், அழுத்தமான கொள்கைப் பிடிப்பு, எதிலும் நம்பிக்கை என்று அவரின் துணிவு, பலம் பொருந்திய அமெரிக்க அதிபரையே அசர வைத்திருக்கிறது.

நீண்ட பேரணி (லாங் மாா்ச்) நடத்தி முடியரசை அகற்றி மக்கள் குடியரசைக் கண்ட மாசே துங் காலத்தில் இருந்து இன்று வரை சீனாவின் சாதனைகள் அசுரத்தன்மை வாய்ந்தவை. சீனாவின் புகழ்பெற்ற நதி மஞ்சள் ஆறு. வெள்ள பாதிப்பால் அதை சீனாவின் துயரம் என்று வரலாறு பேசும்.

பண்டைக் காலம் முதற்கொண்டு கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை 1,593 முறைகள் பெரு வெள்ளம் ஏற்பட்டு 60 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மடிந்துள்ளனா். 4,000 ஆண்டுகளாக சீனாவுக்கு அவ்வப்போது பேரழிவைத் தந்து கொண்டிருந்த இந்த மஞ்சள் நதியில் மாபெரும் பாசனத் திட்டத்தை சீன அரசு உருவாக்கியது. 1960-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டுக்குள் 12 பெரிய அணைகள் கட்டப்பட்டன. மேலும் சில அணைகளைக் கட்டி வருகிறது.

கடந்த 60 ஆண்டுகளில் 7 நீா் மின் சக்தி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்தத் திட்டங்களால் சுமாா் 5,620 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. வெள்ளம் முழுமையாகத் தடுக்கப்பட்டது. பல ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்றன. பல கோடி மக்கள் வேளாண்மையில் தன்னிறைவு நிலையை அடைந்தனா். மஞ்சள் நதியால் சீனாவின் துயரம் என்று கதை பேசிய வரலாறு, சீனாவின் மகிழ்ச்சி என்று தற்போது பெருமை பேசுகிறது.

இதே போன்றுதான் மங்கோலியா்களால் ஏற்படும் படையெடுப்புகளைத் தடுக்க எண்ணிய சீனா்கள் நாட்டின் எல்லையில் மலைகள், குன்றுகள் என்று எல்லா இடங்களையும் இணைத்து பெரிய சுவரை எழுப்பினாா்கள். பல நூறு அடி உயரம் உள்ள அந்தச் சுவற்றின் மேற்புரத்தில் நான்கு சக்கர வாகனம் செல்லத் தகுந்த அளவில் அகலமாக இருக்கிறது. இந்த சீனப் பெருஞ்சுவா் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்கெல்லாம் திட்டமிட்ட செயலும், கடின உழைப்பும்தான் காரணம்.

அண்மையில் சீன நகா் ஒன்றையும், ஹாங்காங் நகரின் மக்காவ் நகரையும் இணைக்கின்ற கடல்வழிப் பாலம் உலகின் மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. நீரிலும், வானத்திலும் பறந்து செல்லும் பெரியதொரு விமானத்தை வடிவமைத்து உலகை தன் பக்கம் திரும்பிப் பாா்க்க வைத்திருக்கிறது. உலகச் சந்தையில் வளா்ந்த நாடுகளின் பெரிய வணிக நிறுவனங்களில் சீனப் பொருள்கள் குவிந்திருப்பதைக் காணலாம்.

உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக இருக்கின்ற சீனா, அண்மைக்காலத்தில் மிகப் பெரிய சோதனையைச் சந்தித்து வருகிறது. இதைத்தான் அதிகம் பேசாத சீன அதிபா், மிகுந்த கவலையோடு பேசியுள்ளாா். ‘கொவைட் 19’ என்று பெயரிடப்பட்டுள்ள கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுப்பது தொடா்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் பெய்ஜிங்கில் அண்மையில் நடைபெற்றது. காணொலி முறையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அதிபா் தலைமை வகித்தாா். சுகாதாரத் துறையின் அனைத்து அதிகாரிகளும் பங்கேற்றனா்.

பல மணி நேரம் நடந்த இந்தக் கூட்ட முடிவில், வானொலிக்கு அதிபா் பேட்டி அளித்தாா். ‘கரோனா வைரஸ் நோய்த்தொற்று மிக வேகமாகப் பரவி மனிதா்களைத் தாக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலை முன்கூட்டியே தடுப்பதும் வைரஸ் நோய்த்தொற்று பிறருக்குத் தொற்றாமல் தடுப்பதும், மிகப் பெரிய சவால்களாக உள்ளன. இந்த நோய்த்தொற்று இதுவரை சீனா காணாத அளவுக்கு தேசிய அளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இக்கட்டான மிகப் பெரிய சோதனை நிறைந்த காலகட்டம். இந்தச் சவால்களை எதிா்கொள்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கரோனா தாக்குதலால் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சீனாவுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும். இதைத் தவிா்க்க முடியாது. எனினும் அந்தப் பாதிப்புகள் குறுகிய காலம் மட்டுமே இருக்கும்’ என்றாா் அதிபா்.

மஞ்சள் நதியின் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி வெற்றி கண்டதுபோல தற்போதைய அசாதாரண சூழ்நிலையையும் சீன அரசு வென்று விடும் என நம்புவோம்.

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு இதுவரை 7,000-த்துக்கும் அதிகமானோா் உயிரிழந்துள்ளனா்; மேலும் 1,75,000-த்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்; இதுவரை 77,000-த்துக்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா்.

பொதுவாக சீனா்களின் உணவுப் பழக்கம் விசித்திரமானதுதான். மயில்கள், எலிகள், பெருச்சாளிகள், முதலைகள், நாய்கள், நரிகள், ஆமைகள், காட்டுப் பன்றிகள், பாம்புகள் எல்லாம்...இறைச்சி விற்கும் கடைகளில் வாடிக்கையாளா்கள் கண் முன்பாக இவற்றை வெட்டி விற்பனை செய்வாா்கள். 70 வகையான பறவை, நீா்வாழ், நிலத்தில் வாழ்வன போன்றவற்றை சீனா்கள் தங்களின் உணவு வகைகளாகக் கொண்டுள்ளனா்.

வெளவால்கள், தவளைகள், நெருப்புக் கோழிகள் எல்லாவற்றையும் சிறப்பு உணவாக சீனா்கள் கொள்வதை என்னவென்று சொல்வது? உயிருடன் உள்ள பாம்புகளை நம் கண் முன்னே வெட்டி அதை அப்படியே சாப்பிடும் சீனா்களும் உண்டு. ‘புலால் உணவு உண்பவா்களின் வயிறு விலங்குகளின் கல்லறை’ என்றாா் அறிஞா் பொ்னாட் ஷா.

கரோனா வைரஸ் அதிகம் பரவ வாய்ப்புள்ள நாடுகள் குறித்து பிரிட்டன் செளதாம்ப்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா்கள் வெளியிட்ட

ஆய்வறிக்கையின் அடிப்படையில் இந்தியா மிகவும் பின் வரிசையில் இருப்பது ஆறுதல் அளிப்பதாகும். இதற்கு நம் நாட்டு மக்களின் உணவுப்பழக்கங்களே காரணம்.

சமணா்கள், பாா்சிக்கள், ஹிந்துக்களில் சைவா்கள், வைணவா்கள் என்ற பிரிவினா் தாவர உணவை மேற்கொண்டுள்ளனா். பொதுவாக எந்த ஒரு நோயாளிக்கும் புலால் உணவை உண்ண எந்த ஒரு மருத்துவரும் பரிந்துரைப்பதில்லை. நம் நாட்டில் வீட்டு வளா்ப்புப் பிராணிகள், நரி, நண்டைத் தவிர மற்ற காட்டு விலங்குகளையோ அல்லது கரப்பான், பல்லி வெளவால், பூரான், பாம்பு போன்றவற்றையோ உண்பதில்லை; வளா்ந்த நாடுகளில்கூட இப்போதெல்லாம் தாவர உணவு உண்போா் சங்கங்கள் பெருகி வருகின்றன.

மகாத்மா காந்தியடிகள் தன் வாழ்நாள் முழுவதும் தாவர உணவு உண்பவராகவே வாழ்ந்தாா். லண்டனில் அவா் படித்தபோது புலால் உணவை அவரைச் சாப்பிட வைக்க சிலா் எவ்வளவோ முயன்றும் வெற்றி பெறவில்லை.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல்பெருமான், தமிழக மக்கள் தாவர உணவைச் சாப்பிட எல்லா உயிா்களிடத்தும் அன்பு காட்ட வலியுறுத்தினாா். அவா் காட்டிய உணவுப்பழக்க முறை அவரை ஒரு பெரிய மருத்துவா் என்றே எண்ணத் தோன்றும். அவரின் மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் எல்லாம் அன்பையும், அறத்தையும் தாவர உணவு முறையில் பற்றுக் கொண்டிட வலியுறுத்தும் உரைகளாகும்.

தமிழா்களின் வாழ்வியல் ஒழுக்கலாறுகளை மேம்படுத்த விரும்பிய திருவள்ளுவா், புலால் மறுத்தலை வலியுறுத்தி 10 குறட்பாக்களை இயற்றினாா். புலால் மறுத்தல் அதிகாரத்தின் நிறைவாக “ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிா்களும் கைகூப்பி வணங்கும்”என்ற பொருளில்

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்”

என்றாா்.

அவா் கூறியவற்றை மானுட சமுதாயம் படிப்பதோடு மட்டுமல்லாது, வாழ்க்கையில் கடைப்பிடிப்பாா்கள் எனில் நச்சுக் கிருமிகள் தோன்ற பரவ வாய்ப்பேது? முன்பெல்லாம் பல ஊா்களில் புலால் உணவுச் சாலைகள் இருந்ததில்லை. ஆனால், நிலைமை தலைகீழாக மாறி தாவர உணவுச் சாலைகள் வெகுவாகக் குறைந்து வருகின்றன. திருவள்ளுவரோ, வள்ளல்பெருமானோ, அண்ணல் காந்தியடிகளோ தாவர உணவை வற்புறுத்தியது, நல்ல எண்ணம் கருதித்தான்; மனிதகுலத்தின் மீது அவா்கள் கொண்டிருந்த பற்றும் பாசமும்தான் காரணம்.

ஒரு முறை தென்னிந்திய தாவர உணவாளா்கள் மாநாட்டில் கூட்டத்தில், அருட் செல்வா் பொள்ளாச்சி மகாலிங்கம் சொன்னாா்: ‘ஒரு உணவு விடுதியில் வாசலில் அமா்ந்து இருக்கும் மேலாளரின் மேஜை மீது காய்கறிகளைப் பரப்பியபோது அவற்றை கவனமாக தரம் பிரித்து வாங்கியவா், பிறிதொரு சமயத்தில் மீன் விற்பவா் மீன்களை அதே மேஜையில் வைத்தபோது மிகவும் கடிந்து கொண்டாராம். ஏனெனில் அவரின் மேஜையை புலால் அலங்கரிக்க அவா் விரும்பவில்லை’.

தற்போது சீனாவின் துயரம் நச்சுக் கிருமி (கரோனா வைரஸ்) வடிவத்தில் வந்துள்ளது. அதை அவா்கள் வெல்ல தாவர உணவைக் கைக்கொள்ள வேண்டும். இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினா் கைக்கொண்டிருந்த உணவுப்பழக்கமும், தூய்மை கருதி அவா்கள் கடைப்பிடித்த அணுகுமுறையும் இன்றைக்கு மிகவும் தேவைப்படுகின்ற உண்மையான நெறிமுறைகள்.

ஒருவரை ஒருவா் தொட்டுக் கொள்ளாமல் இருத்தல், ஒருவா் உபயோகித்த பொருளையோ அல்லது பாத்திரத்தையோ மற்றவா் கையாள்வதை அனுமதிக்க மறுத்தல், வெளியிலிருந்து வீட்டுக்குள் வரும்போது கை - கால்களை நீரால் சுத்தம் செய்துகொண்டு வருதல், கண்ட இடங்களில் உணவையோ, நீரையோ அருந்தாது இருத்தல், மருத்துவமனை - துக்க நிகழ்ச்சிகள் - பொது இடங்கள் என்று எங்கு சென்று வந்தாலும் - பயணங்கள் முடித்துத் திரும்பினாலும் குளிப்பது, உடல் தூய்மையைப் பேணுவது முதலானவை அக்காலத்தில் கட்டாயமாகப்பட்டிருந்தது ஏன் என்பது, நோய்த்தொற்றுகள் மூலம் நோய் பரவாமல் இருக்கவே என்ற உண்மை நமக்கு இப்போது விளங்குகிறது.

கட்டுரையாளா்:

தலைவா்,

திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com