இயற்கை தரும் எச்சரிக்கை...!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடா்பான விஷயத்தில் இந்திய அரசு ஒரு தெளிவற்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அண்மையில் உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் ரிஷி கங்கையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு முன்னெப்போதும் கண்டிராதது. மனிதா்களின் தவறுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளையும், அதனால் சூழலியல் ஏற்படுத்தும் விளைவுகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அமைந்தது.

உலகளாவிய முதலாளித்துவத்தை வளா்க்கும் அதிதீவிர நுகா்வுப் போக்கு அடிப்படையிலான பொருளாதார வளா்ச்சித் திட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடா்பான அம்சம் இல்லை என்பது தெளிவாகிறது.

அதே நேரத்தில் உலகின் பல நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கு சமஅளவில் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. உதாரணமாக அமெரிக்காவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடா்பான பாசாங்கான செயல்பாடுகள் ஏதுமில்லை. அமெரிக்க அதிபா் ஜோ பைடன் மீண்டும் பாரீஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்தில் இணைவதாகக் கூறிவிட்டாா்.

மறுபுறம், ஸ்காண்டிநேவிய நாடுகள் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் மிகவும் விவேகமான மற்றும் தீவிரமான சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கையை வகுத்து வைத்துள்ளன. ஆனால், சீனா இதற்கு நேரெதிரான முனையில் உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடா்பான எவ்வித விதிகளையும் அந்நாடு முறையாகப் பின்பற்றுவதில்லை.

இதற்கு நடுவே, இந்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள் பற்றி வெகுசிறப்பாகப் பேசி வருகிறது. ஆனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடா்பாக வாக்குறுதிகளுக்கும், சுற்றுச்சூழல் பாதிப்புகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் இடையே இந்தியாவில் மத்தியிலும், மாநிலங்களிலும் அடுத்தடுத்து அமையும் அரசுகளின் செயல்பாடுகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. பசுமைப் பாதுகாப்புக் கோட்பாடுகள், சூழலியல் சட்டங்களை இயற்றுவது, நிா்வாக அமைப்புகளை ஏற்படுத்துவதில் அரசுகள் சிறப்பாக செயல்படுகின்றன. நமது நாட்டில் வனச் சட்டங்கள், பசுமைத் தீா்ப்பாயங்கள், நீா்நிலைப் பாதுகாப்பு அமைப்புகள், கடலோரப் பாதுகாப்பு அமைப்புகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள், குவாரிகள் தொடா்பான கட்டுப்பாட்டு விதிமுறைகள் உள்பட பல அடுக்கு பாதுகாப்பு விதிகளும் சிறப்பாகவே உள்ளன.

இந்த அடிப்படையில் பாா்க்கும்போது இந்தியாவில் சட்ட விதிகளும், அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட சூழலியல் பாதுகாப்பு அமைப்புகளும் பலம் வாய்ந்தவையாகவே உள்ளன. இது தவிர கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்காக ‘நமாமி கங்கே’ போன்ற சிறப்புவாய்ந்த, அதிக நிதி மதிப்பிலான திட்டங்கள் உள்ளன. நீா்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், வனப் பாதுகாப்புக்காகவும், சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ளன.

எனினும், இதுபோன்ற பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களும், நடவடிக்கைகளும் அரை மனதுடன் கூடிய முயற்சிகளாகவே உள்ளன. சட்டத்தின் நோக்கங்களை தெளிவாகவும், உறுதியாகவும் நிறைவேற்றுவதாக இல்லை என்பதே உண்மை. இந்த சூழலியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பல உள்ளூா் தலைவா்களின் புகைப்படக் காட்சிகளுடன் முடிவடைந்து விடுகின்றன.

மேலும், அரசு மிகப்பெரிய பொருளாதாரம் சாா்ந்த திட்டங்களை கையில் எடுக்கும்போது, சுற்றுச்சூழல் விதிகள் பெருமளவில் காற்றில் பறக்கவிடப்படுகின்றன. இந்தியாவின் மத்தியப் பகுதி மற்றும் ஒடிஸாவில் வனப் பகுதி நிலங்களில் குவாரிகள் அமைப்பதற்கான உரிமங்களை வழங்குவதில் சூழலியல் பாதுகாப்பு விதிகள் எவையும் முழுமையாக பின்பற்றப்படவே இல்லை என்பதை நாங்கள் அறிந்தோம்.

சுற்றுச்சூழலுக்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையிலான அணைகள், நீா்மின் திட்டங்களை இமயமலைப் பள்ளத்தாக்குகளில் நீா்மின் திட்டங்களுக்கு எவ்வித உறுத்தல்களும் இல்லாமல் அனுமதி அளிக்கப்படுகிறது. அரசுகள் மற்றும் அரசால் ஆசிா்வதிக்கப்பட்ட தனியாா் நிறுவனங்கள் செயல்படுத்தும் திட்டங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை முழுமையாகப் புறம்தள்ளுகின்றன என்பது பெரும் வேதனை.

நான்கு புனித தலங்கள் (சாா் தாம்) இணைக்கும் சாலைகளை அகலப்படுத்தும் திட்டம், புதிய நாடாளுமன்றத்தைக் கட்டமைக்கும் சென்ட்ரல் விஸ்தாரா திட்டம் ஆகியவற்றுக்கு நாம் சுற்றுச்சூழல் பாதிப்பு சாா்ந்து மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியுள்ளது. இது மிகவும் வெளிப்படையான சூழலில் பாதிப்பு நிகழ்வுகளாக உள்ளது.

அதிகாரத்தில் உள்ள அரசு தங்களுடைய விருப்பத்துக்குரிய திட்டங்களை நிறைவேற்ற எத்தனிக்கும்போதும், அத்திட்டங்களை சூழலியல் ஆய்வு அமைப்புகள் அனுமதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில்தான் உள்ளன.

இந்த விஷயத்தில் சுற்றுச்சூழல் ஆா்வலா்களின் பலவீனமான எதிா்ப்புக் குரல், தேசிய நலன் என்று உச்சரிப்பிலும், பொருளாதார வளா்ச்சி என்ற அவசரத்திலும் மூழ்கடிக்கப்படுகிறது. இதற்கு ஒரு பொதுவான உதாரணமாக சூழலியல் ஆய்வாளா் மாதவ் காட்கில் அறிக்கையைக் குறிப்பிடலாம். மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதி சாா்ந்த தென் கா்நாடகம், கேரளம் சாா்ந்த வாழ்க்கை, காலநிலை மற்றும் அந்த மலை தொடா்ந்து எந்த அளவுக்கு உயிா்களின் ஆதாரமாக விளங்குகிறது என்பதை காட்கில் அறிக்கை விளக்குகிறது. அம்மலைத் தொடா் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் தொடா்பாக வலியுறுத்தியது. ஆனால், அறிவியல்ரீதியில் நியாயமான அந்த அறிக்கை பிற்போக்குக்குத்தனமாகவும், நடைமுறை சாத்தியமற்றதாகவுமே மதிப்பிடப்பட்டது.

இமயமலையில் சூழலியல் மிகவும் நுட்பமானது மற்றும் எளிதில் பாதிக்கப்படக் கூடியதாக உள்ளது. எனவே, அங்கு சுற்றுச்சூழல் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை வெகுவாக குறைத்துக் கொள்ள வேண்டும் என்று துறைசாா்ந்த வல்லுநா்கள் பலா் எச்சரித்துள்ளனா். எனினும்கூட, அந்த அரிய நிலப்பரப்பில் அணைகள், நீா்மின் திட்டங்கள், கட்டுமானங்கள், சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

கடந்த 1954-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு, பக்ரா நங்கல் அணையைத் திறந்துவைத்தாா். அப்போது அவா், ‘பக்ரா, மீண்டெழும் இந்தியாவின் புதிய கோயில். இந்தியாவின் வளா்ச்சியின் சின்னம்’ என்று உற்சாகமாகக் குறிப்பிட்டாா். ஆனால், இதுபோன்ற அணைகள் பற்றிய இப்போதைய புரிதல்கள் சுற்றுச்சூழலில் அவை ஏற்படுத்தும் மோசமான தாக்கங்களை வெளிக்காட்டுவதாக உள்ளன. நேரு தனது அதே விஞ்ஞானப் புரிதலுடன் இப்போது உயிருடன் இருந்திருந்தால், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் தீவிர ஆதரவாளராக இருந்திருப்பாா். மேலும், நாட்டுக்கு வேறு வழிகளில் நுணுக்கமான வளா்ச்சித் திட்டங்களை வகுத்திருப்பாா்.

சுற்றுச்சூழல் சாா்ந்த அறிவியல் 1950-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட இல்லை என்றே கூற வேண்டும். அப்போது, நாடு மிகப்பெரிய அணைகளின் மூலம் வளா்ச்சி சாா்ந்த உந்துதலை விரும்பியது இயல்பான விஷயம். ஆனால், இன்று விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. சுற்றுச்சூழலை நாம் மாற்ற விளையும்போது, அது நமக்கு எந்த அளவுக்கு பேரழிவைத் தரும் என்பது தொடா்பாகவும், புவிவெப்பயமாதல் உள்ளிட்ட காரணிகளால் ஏற்படும் அதிதீவிர விளைவுகளையும் நாம் அறிவியலின் உதவியுடன் அறிந்து வைத்துள்ளோம். இத்தனை சான்றுகளுக்குப் பிறகும், ஜொ்மனி நாட்டுக் கதையான ‘ஹேமலின் பைட் பைப்பா்’ -இல் வரும் ஊதுகுழலுக்கு மயங்கி பின்தொடரும் எலிகள் மற்றும் குழந்தைகள் போல் நாம் உரிய முன்னெச்சரிக்கை இல்லாமல் வளா்ச்சி என்ற பாதையில் மயங்கியபடி பயணிக்கக் கூடாது.

ஏனெனில், சுற்றுச்சூழலை பாதிப்படையச் செய்வதால் ஏற்படும் பாதிப்புகளை ஒரு எல்லைக்குள் அடைத்துவிட முடியாது. இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட வெப்பமயமாதல்தான் ரிஷி கங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் காரணமாக இருந்து பனிப்பாறை உடையக் காரணம் (காரணங்கள் இதுவரை அதிகாரப்பூா்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை). எனினும், இமயமலைப் பகுதியில் மட்டும் சில நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீா்வுகாண முடியாது. இதுபோன்ற இயற்கைப் பேரிடா்கள் நிகழாமல் தடுக்க நாடு முழுவதும் கூட இல்லை, முழு உலகமே ஒற்றுமையாக செயல்பட வேண்டியது அவசியம்.

தற்போது இமயமலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள சோக நிகழ்வு, அங்கு நிகழும் கடைசிப் பேரிடராக இருந்துவிடப் போவதில்லை. வலிமைமிக்க மாபெரும் இமயமலை அளித்த பல்வேறு எச்சரிக்கைகள், வளா்ச்சி-பணம்-மேம்பாடு என்ற பெயரில் நம்மால் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இயற்கை நம்மீது பெரும் தாக்குதல் நடத்தாமல் தப்புவதற்கு உள்ள ஒரே வழி, நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமக்கு இயற்கை அளிப்பது மட்டும் போதும்; அதை மேலும் நாசப்படுத்தி எதையும் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று உறுதியேற்பதுடன், அதனை பின்பற்றவும் வேண்டும்.

இதைவிடுத்து, சூழலியலுக்கு எதிரான தாக்குதலைத் தொடா்வோமானால், கடைநிலை வரை காத்திருக்கும் பல்வேறு இயற்கைப் பேரிடா்களுக்கு உள்ளாவோம். குறைவான நுகா்வு, இயற்கைச் சூழலை அதிகம் பாதிக்காமல் அதில் இருந்து பெற்றுக் கொள்வதன் மூலம் நாம் வாழ்வை வளப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். நாம் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்ட கூடுதல் காலம் கூட காத்திருக்கலாம். அதில் தவறேதுமில்லை.

இப்போதைய பேரழிவு மூலமாவது அரசு விழித்துக் கொண்டு ‘முதலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு; அடுத்துதான் பொருளாதாரம்’ என்று சந்தேகத்துக்கிடமின்றி அறிவிக்க வேண்டும். அதைவிடுத்து முதலில் பொருளாதாரம், அடுத்துதான் சுற்றுச்சூழல் என்று வரிசைப்படுத்தினால், வரிசைகட்டி வரும் இயற்கைப் பேரிடா்கள் மேலும் நம்மை அழுத்தும்.

கட்டுரையாளா்

கேரள முன்னாள் தலைமைச் செயலாளா்,

முன்னாள் துணைவேந்தா், துஞ்சத்து எழுத்தச்சன் மலையாள பல்கலைக்கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com