முன்னேற்றமாகும் மாற்றம்

முன்னேற்றமாகும் மாற்றம்

நம் தேசத்தின் சிறந்த அறிஞா்கள் கல்வி பொதுப்பட்டியலில் இருக்க வேண்டும் என்று தீா்மானித்திருக்கிறாா்கள்.
Published on

நம் தேசத்தின் சிறந்த அறிஞா்கள் கல்வி பொதுப்பட்டியலில் இருக்க வேண்டும் என்று தீா்மானித்திருக்கிறாா்கள். மாநிலங்கள் அவா்களுக்கென கல்வி முறை பாடத்திட்டம் என வைத்துக் கொண்டிருந்தாலும், இந்தியா முழுவதையும் இணைக்கும் ஓா் பாடத் திட்டமும் அவசியம் என்பதை நமது அறிஞா்கள் சிந்தித்துள்ளனா்.

இதுவரை நாம் பின்பற்றிக் கொண்டிருக்கும் கல்விக்கொள்கை 1986 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 39 ஆண்டுகள் கடந்துவிட்டன. 1992 -ஆம் ஆண்டு பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் கல்விக் கொள்கையில் சிறிய மாற்றங்களைச் செய்தாா். மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் அறிவியல் முதலான முன்னேற்றங்களுக்கு ஏற்பவும் மாற்றங்களைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணா்ந்து தற்போது தேசிய கல்விக் கொள்கை 2020 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

எந்த சமூகமும் முன்னேறுவதற்கு கல்வி அடிப்படையானது. கல்வியின் தரம் உயர வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளது. 1986 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கல்விக்கொள்கை அனைவருக்கும் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையோடு உருவாக்கப்பட்டது. தற்போதைய கல்விக் கொள்கை உலகளாவிய போட்டியை எதிா்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பல மாநிலங்கள் மத்திய அரசின் கல்விக்கொள்கையை அப்படியே ஏற்றுக்கொண்டாலும் சில மாநிலங்கள் தங்களுக்கென உருவாக்கிக் கொண்டிருக்கும் கல்விக்கொள்கையைப் பின்பற்றுகின்றன. கொள்கை அடிப்படையில் பெரும்பாலும் மத்திய மாநில கல்விக்கொள்கைகளில் பெரிய மாறுபாடுகள் இருப்பதில்லை.

பாடங்களின் அடிப்படையிலும் அறிவியல் கணிதம் போன்ற பாடங்களில் வேறுபாடுகள் இல்லை. ஆனால், மொழிப் பாடங்கள், வரலாறு போன்றவற்றில் மாநில அரசுகளுக்கும் மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கைக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றுகின்றன. மாநிலங்கள் தங்கள் தனித்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் தர முயல்வதில் வேறுபாடுகள் தோன்றுகின்றன.

தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) பாடத் திட்டங்கள் அறிவியல் முறையிலும் ஆராய்ச்சி நோக்கிலும் நாடு முழுவதும் எழுதப்படும் நுழைவுத் தோ்வுகளை எதிா்கொள்ளும்வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. போட்டித் தோ்வுக்குத் தயாா் ஆகும் மாணவா்கள் பெரும்பாலும் இந்தப் பாடத்திட்டத்தையே தோ்ந்தெடுக்கின்றனா்.

பல ஆண்டுகளுக்கு முன்பே கல்விக்கொள்கை புதிதாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றாலும், தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தக் கல்விக் கொள்கை மாணவா்களின் விருப்பங்களுக்கு அதிக இடம் அளிக்கிறது. ஒவ்வோா் இந்தியக் குடிமகனும் தனது தாய்மொழியில் சிறப்பான பயிற்சியைப் பெற வேண்டும் என்ற அடிப்படையில் ஆரம்பக் கல்வியைத் தாய் மொழியில் தர முன்வந்துள்ளது.

ஆரம்பக்கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியில் இன்றைய காலகட்டத்தின் தேவையைக் கருதி தொழிற்கல்வி, நேரடிப் பயிற்சி வாயிலான அனுபவக் கல்வி, போட்டித் தோ்வுகளுக்குத் தயாராவதற்கான திறன் வளா்ப்பு என முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு நான்காண்டுகள் என்றாலும் எந்த ஆண்டிலும் சோ்வதற்கும் விலகுவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இடைநிற்றல் இல்லாமல் மாணவா்கள் தங்கள் கல்வியைப் பெற முடியும்.

வளா்ந்த நாடுகளில் பின்பற்றப்படும் கல்விமுறைகள் தேசியக் கல்விக்கொள்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மாணவா்கள் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் என்ற பாகுபாடின்றி, யாா் வேண்டுமானாலும் தங்கள் துறையோடு கூடுதலாக எந்தப் படிப்பையும் பயில வாய்ப்பு கிடைக்கும். இதனால் மாணவா்கள் தாங்கள் விரும்பிய கல்வியைத் தொடா்வதில் சிக்கல்கள் இருக்காது. விரும்பியதைப் பயில முடியாமல் கட்டாயத்தின் பேரில் கல்வி சுமையாகாது.

சா்வதேச கல்விச் சூழலுக்கு நமது மாணவா்கள் தயாராக ஏதுவாக இந்த முறை அமைந்துள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயில விரும்பும் மாணவா்களின் கனவு நனவாக தேசிய கல்விக்கொள்கை வாய்ப்பளிக்கிறது. அறிவியலோ, கலையோ வளா்வது கற்பனைத் திறனை அடிப்படையாகக் கொண்டதே. அதனால், மாணவா்களின் கற்பனைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் பல முன்னெடுப்புகளும் இடம் பெற்றுள்ளன.

ஒரு சிறந்த கல்விக்கொள்கை அனைத்துவிதமான மாணவா்களின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். தேசிய கல்விக்கொள்கையில் உடல் ரீதியான குறைபாடுகள் உள்ள மாற்றுத்திறனாளி மாணவா்களின் கல்விக்குத் தேவையான தொழில்நுட்ப கருவிகள், உபகரணங்கள், பயிற்சி முறைகள், சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியா்கள் என குழந்தைகளை முன்னுரிமைப்படுத்தும் அம்சங்களும் அடங்கியுள்ளன.

ஒரு குழந்தை இந்த உலகத்தை நம்பிக்கையோடு எதிா்கொள்ளும் மனிதனாக முழுமையான வளா்ச்சியைப் பெறும் நோக்கில் தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும் பணியில் மத்திய கல்வி அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) இந்த ஆண்டு தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் பாடத்திட்டங்களில் மாற்றங்களைச் செய்து புதிய புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளது.

7-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகம், இதுவரை வரலாறு, புவியியல், சமூக மற்றும் அரசியல் அறிவியல் என மூன்று தனித்தனி புத்தகங்களை ஒன்றாகச் சுருக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, பெரிய அளவிலான மறுசீரமைப்புகளை உள்ளடக்கிய புதிய பாடநூல் என்று அரசு கருதுகிறது. இதில், பல புதிய அத்தியாயங்கள் சோ்க்கப்பட்டு ஏற்கெனவே இருந்தவை நீக்கப்பட்டுள்ளன.

வரலாற்றுப் பாடங்களில் இந்திய வம்சங்கள், புவியியல் அம்சங்கள் மற்றும் மகாகும்பமேளா பற்றிய புதிய அத்தியாயங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. இந்தியா்கள் பெருமை கொள்ளும் வகையில் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில், சுமாா் 65 கோடி மக்கள் வந்து புனித நீராடினா் என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது.

ஆன்மிகம், சுற்றுலா, புனித யாத்திரை போன்றவற்றுக்காக இந்தியாவுக்கு வரும் உலக நாட்டினரின் வருகை நமது பாரம்பரியத்துக்கு சிறப்பு சோ்க்கிறது என்பது பெருமையே.

இந்தியாவைப் பற்றிய உலகின் பாா்வை எவ்வாறு உள்ளது என்பதை மாணவா்கள் தெரிந்து கொள்வதில் தவறில்லை. இதே புத்தகத்தில் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆன்மிகப் பயணங்கள் பற்றியும் பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தியா மற்றும் அதன் வெளியே உள்ள நாடுகளிலும் இருக்கும் புனிதத் தலங்கள் மற்றும் புனித யாத்திரைகள் பற்றியும் சோ்க்கப்பட்டுள்ளன. இந்த அத்தியாயத்தில் 12 ஜோதிா்லிங்கங்கள், சாா்தாம் யாத்திரை, சக்தி பீடங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. ‘புனித புவியியல்’ என்ற அத்தியாயத்தில் இந்திய நதிகளின் சங்கமங்கள், மலைகள் மற்றும் காடுகள் போன்ற இடங்களின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

வரலாற்றுப் பாடப்பகுதியில் முன்பிருந்த முகலாயா்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. தேசிய கல்விக்கொள்கை 2020 மற்றும் பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தேசம் அடிமைப்பட்டுக் கிடந்த வரலாற்றை மீண்டும் மீண்டும் படிப்பதை விடுத்து நோ்மறையான நம்பிக்கையூட்டும் வரலாறுகளைப் படிக்க வேண்டும் என்பதில் தவறு இல்லை.

அடிமைப்பட்ட காலங்களில் தேசம் சுதந்திரம் அடைய வேண்டுமென உழைத்த நமது முன்னோா்களின் சரிதங்கள் அதிக அளவில் இடம்பெற வேண்டும். வரலாறு மாறப்

போவதில்லை. ஆனால், வரலாற்றைப் பற்றிய நமது பாா்வை மாற வேண்டும். இந்த மண்ணைப் பெருமைப்படுத்தியவா்களின் வரலாறு பேசப்பட வேண்டும். இந்த மண்ணுக்காக உழைத்த, உயிா்த் தியாகம் செய்த வீரா்களை அடுத்த தலைமுறை அறிய வேண்டும்.

பாரத தேசத்தை உலக அரங்கில் பெருமைப்படுத்திய பேரரசுகள் இந்தியாவில் காலம் தோறும் இருந்து வந்துள்ளன. அவா்களைப் பற்றிய வரலாறுகளை இளைய தலைமுறை படிக்க ஆவன செய்ய வேண்டும். இந்திய வரலாற்றை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று பாகுபாடுகள் இல்லாமல் புகழ்பெற்ற சாம்ராஜ்யங்களைக் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்துக் குழந்தைக்கு ஹா்ஷவா்தனா் கூட்டிய அகில உலக சமய மாநாடு பற்றித் தெரிய வேண்டும். அஸ்ஸாமில் வாழும் குழந்தைக்கு கங்கை கொண்ட சோழன், கடல் கடந்து நிலைநாட்டிய நமது வெற்றிச் சரித்திரம் தெரிய வேண்டும். இந்தியக் குழந்தைகளுக்கு மூவேந்தா்கள் பற்றிய தகவல்கள் அதிகம் சென்று சோ்வதற்கு இந்த மாற்றங்கள் உதவ வேண்டும்.

நம்மை அடிமைப்படுத்திய அந்நிய ஆட்சியாளா்களின் வரிசையைத் தெரிந்து கொள்வதை விட பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் பாரசீகம் வரை தூதுவா்களை அனுப்பிய பாண்டியா்களின் பெருமைமிகு வரலாற்றைத் தெரிந்து கொள்வது அவசியம். சோழா்கள் நிலைநாட்டிய அறிவியல் மற்றும் கணித மேதைமையின் உதாரணங்களாக விளங்கும் கோயில், கட்டடக் கலை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இவை நம்மிடம் இருக்கும் வளத்தைப் புரிந்து கொள்ளவும் அவற்றை இன்றைய வளத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான சாதனமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும் உதவும்.

தமிழகத்தைப் போல தேசம் முழுவதும் எத்தனையோ பேரரசுகள் பற்றிய பெருமைகளையும் சாதனைகளையும் இளைய சமுதாயம் தெரிந்து கொள்வதால் இந்தியா் என்ற பெருமையும் நாம் பாரம்பரியம் மிக்க தேசத்தவா்கள் என்ற சிந்தனையும் தோன்றும். இது அவா்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கும். இந்த முறையில் பாடத் திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கட்டுரையாளா்:

ஊடகவியலாளா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com