குல்சா சாப்பிட்டிருப்பீர்கள், கிட்டத்தட்ட நாண் போல அதுவும் ஒரு முகலாய உணவு வகை. குல்சாவில் பல வகைகள் உள்ளன. முகலாயர் வருகைக்குப் பின் இந்தியாவில் ஊடுருவிய பலதரப்பட்ட முகல் உணவு வகைகளில் வெகு சில, குறீப்பிட்டுச் சொல்வதென்றால் நாண், ரொட்டி, பிரியாணி, சப்பாத்தி, தந்தூரி, கபாப், போன்றவற்றுள் இன்றளவும் இந்தியர்களால் பெரிதும் விரும்பப்பட்டவற்று வழக்கத்திலிருக்கும் உணவு வகைகளில் குல்சாவும் ஒன்று. இந்தக் குல்சா, முகல் பிரியாணி போல அப்படி ஒன்றும் சுவை நரம்புகளை கட்டிப்போடும் உணவு வகை அல்ல... ஆயினும் இந்த உணவுக்குத் தனது அரசு முத்திரையில் இடம் கொடுத்து கெளரவப்படுத்தி இருக்கிறார் அப்போதைய ஹைதராபாத் நிஜாம்! ஏன் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது இந்த குல்சாவில் என்று கேட்கிறீர்களா? அது ஒரு சுவாரஸ்யமான கதை.