நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தமிழரின் கலாசாரத்தில் அதிகாரத்தின்  அடையாளமாக இருந்திருக்குமா?

கல்லறைகள் தமிழரின் கலாசாரத்தில் அதிகாரத்தின்  அடையாளமாக இருந்திருக்குமா?  

News image
Updated On :15 அக்டோபர் 2019, 2:42 pm IST

முக நூலிலிருந்து....

ஓடி வருகிற பெருநதியொன்றைக்  காலால் எட்டி உதைக்கிறான். 
மணல்களும்,  கூழாங்கற்களுமென சிதற,  
இப்போது  பள்ளங்களும் பாறைகளுமென  இருக்கிறது. 
நதி  அமைதியாய் இருக்கிறது என  இறங்கி விடாதீர்கள்.  
எட்டி உதைத்தவனுக்கென
புதைமணலுடன் காத்திருக்கிறது!

வதிலை பிரபா

மருத்துவமனை வளாகத்தைக் கூட,
விளையாட்டு மைதானமாக மாற்றும் வித்தை...
மழலைகளுக்கு மட்டுமே சாத்தியம். 

கிரிதரன்

சாக்கடையோரம் ஓர் அழுக்கடைந்த
பொம்மையைப்போல் நிற்கிறது...
நீரிருந்தால் மீனிருக்கும் என ஏமாந்த கொக்கு.

காமராஜ் எம்.ராதாகிருஷ்ணன்

பின்னால் பேசுபவன்
புகழ்ந்து பேசினால் என்ன...
இகழ்ந்து பேசினால் என்ன...
காதில் வாங்காமல்
அடுத்த அடி எடுத்து வைத்து
முன்னேறிக் கொண்டே இரு.

மாரியப்பன்

எனக்கான முகத்தினை இங்கே தேடாதீர்கள்~   
அது பல முகமுடிகளை அணிந்து 
எனக்கான தோற்றத்தினைத்  தந்து கொண்டிருக்கும்.

நாகசோதி நாகமணி

சுட்டுரையிலிருந்து...

ஒரு புத்தகத்தை  வாசிக்கிற போது
ஒரு உரையைக் கேட்கிற போது
ஒரு பாடலை ரசிக்கிற போது
உள்ளிருந்து நாம் தேடுவது...
நம் சொந்த முகங்களைத்தானே?
அந்தப் பாடலின் எந்த வரியாக  நாம் இருக்கின்றோம்?
அந்த உரையில் எந்த இடம்  நமக்கானதாய் இருக்கிறது?
அந்தப் புத்தகம் எந்த நினைவைக்  கிளறிவிடுகிறது?

நஸ்ரின் நர்கீஸ்

கானகத்துப் பூவினை கிழித்துச் செல்லும் ரேகையாய்ப் பாதை!

காஞ்சிபுரத்தான்

அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தால்...
"நீயெல்லாம் ஒரு ஜென்மமா'ன்னு 
யாரும் கேட்காத மாதிரி வாழணும்.

ரோசாப்பூ தையல்காரன்

Story image


வலைதளத்திலிருந்து...

கல்லறைகள் தமிழரின் கலாசாரத்தில் அதிகாரத்தின்  அடையாளமாக இருந்திருக்குமா?  

எகிப்தின் பிரமிடுகள் அரச வம்சத்தின் கல்லறைகள். ஆனால் கல்லணை கட்டிய கரிகாலனுக்கு  ஏன் தனக்கு ஓர்  அழியாத கல்லறை கட்ட வேண்டும்  என்று தோன்றவில்லை?  பெருவுடையார் கோவிலைக் கட்டிய தஞ்சை ராஜ ராஜ சோழனுக்கு கல்லறை இருக்கிறதா? இருப்பதாக அடிக்கடி யூ டியூப்பில் வெளிவரும்  செய்திகள் கூட எந்த அளவுக்கு ஆதாரபூர்வமானவை  என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தை ஆண்ட மூவேந்தருக்கும் கல்லறைகள் இல்லை  என்பது மட்டுமல்ல, அரண்மனைகளும் இல்லை. 

வட இந்தியாவில் ஜெய்ப்பூர் போன்ற பகுதிகளில் வாழ்ந்த  அரசர்களின் அரண்மனைகள் இப்போதும்   பளிங்குக் கற்களில் ஜொலிக்கின்றன.  இந்தி திரைப்படங்களின் கனவு காட்சிகளுக்கும்  காதல் டூயட்டுகளுக்கும் அந்த அரண்மனைகள்   பெரிதும் பயன்படுகின்றன.

உலக அதிசயமான தாஜ்மஹால் ஒரு கல்லறைதான் என்பது நாம் அறியாத செய்தி அல்ல.  கல்லறை கலாச்சாரம் என்பது எப்போது ஏற்பட்டது? கல்லறை கட்டுவது என்பது அந்த குறிப்பிட்ட ஆளுமையைக் கொண்டாடுவது என்பதும்  அவருடைய முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது என்பதும் கூட   ரொம்பவும் மேம்போக்கானது.  ஒரு வகையில் இவை எல்லாமே ஆளுமைகளை அடையாள அரசியலுக்குள்  அடக்கி முடக்கிப் போடும் வித்தை.
http://puthiyamaadhavi.blogspot.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.