பணி - ஓய்வு...
PEOPLE SAYS THAT A RETIREMENT IS ACTUALLY A PRE- INTIMATED DEATH.
அதாவது, பணி ஓய்வு என்பது முன் அறிவிப்புடன் வரும் ஒரு மரணம் போன்றது என்பார்கள்.
உதாரணமாக,
1 வருட காலத்தில் ஓய்வு பெறுபவருக்கு 1 கிலோ கவலை இருக்கிறது என்று எடுத்துக் கொள்வோம்.
அதுவே 6 மாத காலத்தில் = 4 கிலோ கவலை.
1 மாத காலத்தில் = 25 கிலோ கவலை.
1 வார காலத்தில் = 100 கிலோ கவலை என்று நாட்கள் குறையக் குறைய கவலை பன்மடங்காகப் பெருகுமாம்.
அதுவே, ஓய்வு பெறும் நாள் என்றால் அவருக்கு உச்சகட்ட கவலையே வந்து விடுகிறது. எனவேதான் பணி ஓய்வு என்பது "a pre- intimated death" என்பார்கள். ஏனிந்த நிலைமை? இதற்கு முக்கியமாக 3 காரணங்களைக் கூறலாம்.
மேற்கண்ட 3 காரணங்களால் ஏற்படும் மனக் கவலை எப்போதும் நம்மைக் கொன்று கொண்டே இருக்கும்.
இவையாவும் பெரும்பாலான ஓய்வு பெறுவோர்க்கு ஏற்படும் இயற்கையான பிரச்சினைகள்.
ஆனால் புத்திசாலிகள், இந்த 4 பிரச்சனைகளில் இருந்து எப்படி பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள்?
1. உடலியக்கம் குறைதல்:
உண்மையில் பணி ஓய்வு என்பது பணிக்குத்தான் ஓய்வே தவிர, உடலுக்கும் , மனதுக்கும் ஓய்வு அல்ல என்பதை நாம் உணர வேண்டும். அதாவது, சில வருடங்களுக்காவது வேறு நிம்மதி தரும் வேலைக்கு செல்வது அல்லது சேவை செய்வது என்று நம் உடலையும், மனதையும் இயக்கத்திலேயே வைக்க வேண்டும். இதனால் நேரம் போவதே தெரியாது. சோம்பேறித்தனம் வராது. நேரத்துக்குச் சாப்பிடுவோம். வியாதிகளைத் தவிர்ப்போம். சந்தோஷமாக வாழலாம்.
2. அடுத்தது பணக் கஷ்டம்:
பணியில் இருக்கும் காலத்தில் சேமிப்பவனும் பணிஓய்வு காலத்தில் சேமித்த பணத்தை திட்டமிட்டு செலவிடுபவனுமே புத்திசாலி.
3. அடுத்தது கெளரவக் குறைச்சல்:
"என் வாழ்க்கையை என் இஷ்டப்படி நான் வாழ்வதற்காகத்தான் நான் படைக்கப் பட்டிருக்கின்றேன்" என்று எண்ணுகிறவனுக்கு மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைத்தாலும் "எனக்கு கவலையில்லை" என்றே நினைப்பான். உண்மையில் கவுரவக் குறைச்சல் என்பது என்ன? அது ஒரு போலியான சுய உணர்வுதான். அது மனதில் வேதனையை அதிகரிக்கும். குறிப்பாக, "கவலைப்படுதல்" என்கிற செயலானது "தன்னைத்தானே தண்டித்துக் கொள்வதே" ஆகும்.
எனவே , மனிதனின் மாபெரும் எதிரி, அவன் மனதில் தோன்றும் வேதனையே ஆகும்.
"நீ பணிஓய்வு பெற்றுவிட்டாயே!" என்று யாராவது நம்மை கேலி செய்யப் போகிறார்களா?" "இல்லையே.!!!" "அய்யோ...நான் பணிஓய்வு பெற்றுவிட்டேனே.!" என்று நமக்கு நாமே நினைத்து கொண்டிருக்கிறோமே அந்தப் போலியான உணர்வைத் தவிர்த்து விட்டால் இனி சந்தோஷம்தான்.
மேற்கண்ட 3 எதிரிகளும் மறைந்து விட்டால், நமது மனக்கவலையும் மறைந்து விடும்.
நீங்கள் சொல்லுவது எனக்கு சற்றே மனஆறுதலைத் தந்தாலும் என் கவலை முழுவதுமாகப் போகவில்லை என்கிறீர்களா?
’பண்டிதர்கள் இறந்தார்க்கோ, இருப்பார்க்கோ கவலை கொள்வதில்லை."
- என்று கீதை கூறுகிறது.
இதன் விளக்கம் என்னவென்றால், "பண்டிதர்கள் யாருக்காகவும் கவலை கொள்வதில்லை"
அதாவது, பண்டிதர்கள் கவலை கொள்வதில்லை.
அதாவது, ஞானிகள் கவலை கொள்வதில்லை.
அதாவது, அஞ்ஞானிகள் கவலை கொள்வார்கள்.
அதாவது, கவலைகளுக்கு காரணம் ஞானமின்மை.
ஆக, எல்லா கவலைகளுக்கும் காரணம் ஞானமின்மையே.
ஆம். எல்லா விதமான கவலைகளுக்கும் காரணமாக இருப்பது ஒவ்வொரு விதமான ஞானமின்மையே என்கிறது பகவத் கீதை.
உதாரணமாக, கயிற்றை பாம்பாக காண்பவனுக்கு பயம் உண்டாகிறது. அந்த பயமே கவலையாக மாறுகிறது.
ஒரு பெரியவர் அதைக் கையில் எடுத்து, "தம்பி, அது பாம்பு அல்ல. கயிறுதான்" என்று கூறுகிறார். உடனே, அதாவது, கயிறு என்ற ஞானம் வந்த உடனே அழுகை அவனுக்குச் சிரிப்பாக மாறிவிடுகிறது.
முதுமை, இயலாமை, உடல்வலி, தீராத-நோய், இயலாமை, மரணம் போன்ற தவிர்க்க முடியாத கவலைகளுக்கு என்ன செய்வது என்கிறீர்களா?
எந்த ஒரு பிரச்சினையை உன் முயற்சியால் தவிர்க்கவே முடியாதோ!
எந்த ஒரு பிரச்சினைக்கு தீர்வே இல்லையோ...
எந்த ஒரு பிரச்சினை நடந்தே தீருமோ...
அதை ஏற்றுக் கொள்வதே சிறந்தது!
- என்கிறது கீதை.
ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்?
பொதுவாக, ஒரு பெரிய வியாதியானது உடல்வலி + மனவலி அகிய 2 வலிகளை சேர்த்தே ஏற்படுத்தும். உடல் வலியைவிட மனவலியே மிகவும் கொடுமையானது. ஒரு மாணவன் 40 நிமிடம் கூடைப்பந்து விளையாடுகிறான். மறுநாள், அதே மாணவன் தன் தவறுக்காக சக மாணவர்களின் மத்தியில் 10 தோப்புகரணம் போடுகிறான். இரண்டுமே வலியைத் தந்தது. முதலாவது வலி, ஏற்றுகொண்ட வலி். இதில் மனவலியும் இல்லை. உடல்வலியும் மிகக் குறைவே. இரண்டாவது வலி, ஏற்றுகொள்ளாத வலி். மனவலியும் அதிகம். அதனால் உடல் வலியும் அதிகம். ஆக, ஏற்றுக் கொண்ட பெரிய வலியைக் காட்டிலும் ஏற்றுக் கொள்ளாத சிறியவலி மிகவும் கொடுமையானது.
எனவே, தவிர்க்க முடியாத பிரச்சனைகளால் ஏற்படும் கவலையை முற்றிலுமாகக் குறைக்க "ஏற்றுக் கொள்ளுதல்" என்பதே சிறந்த மார்கம் என்பது தெளிவாகிறது.
அதைப்போலவே, பணிஓய்வு என்பதும்... தவிர்க்க முடியாதது, மாற்ற முடியாதது, நடந்தே தீரவேண்டியது என்பதை நாம் அறிவோம். எனவே அதை ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.
குழந்தை, வாலிபம், வயோதிகம், மரணம் என்பது நமது 4 பருவங்கள்.
குழந்தை, வாலிபம், ஆகிய இரண்டு பருவங்களை பிரிப்பது திருமணம் என்பார்கள். அதைப்போலவே வாலிபம், வயோதிகம் ஆகிய இரண்டு பருவங்களைப் பிரிப்பது பணிஓய்வு என்பார்கள்.
அதாவது திருமனத்தை நாம் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டதைப் போலவே பணி ஓய்வையும் நாம் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வோம்.
பணிஓய்வு என்பது வயோதிகத்தின் ஆரம்பம் என கவலைப் படக்கூடாது.