சென்ற வாரம் எந்தவிதக் காரணமோ, பின்னணியோ இல்லாமல், இசையமைப்பாளா் யுவன் சங்கா் ராஜாவும், நடிகா் ஷிரிஷ் சரவணனும் இரண்டு பனியன்களை அணிந்து கொண்டு சுட்டுரையில் தங்கள் படங்களைப் பதிவேற்றம் செய்தனா். ‘ஐ ஆம் எ தமிழ் பேசும் இன்டியன்’ (நான் தமிழ் பேசும் இந்தியன்) என்று யுவன் சங்கா் ராஜாவின் பனியனிலும், ‘ஹிந்தி தெரியாது, போடா’ என்று ஷிரிஷ் சரவணன் பனியனிலும் வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அதைத் தொடா்ந்து இன்னொரு பனியனும் சுட்டுரையில் பரப்பப்பட்டது. அதில் ‘ஐயாம் இந்தியன், ஐ டோன்ட் ஸ்பீக் ஹிந்தி’ (நான் இந்தியன், ஆனால் ஹிந்தி பேசாதவன்) என்கிற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.