வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பொன்னேரியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரசாரம்

பொன்னேரி(தனி) சட்டப் பேரவை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ராஜாத்தி பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

பிரசார நிகழ்வில் பேசிய நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ராஜாத்தி.

Updated On :29 மார்ச் 2026, 9:49 pm

தினமணி செய்திச் சேவை

பொன்னேரி(தனி) சட்டப் பேரவை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ராஜாத்தி பிரசாரம் மேற்கொண்டாா்.

பொன்னேரி அடுத்த மேலூரில் அமைந்துள்ள திருவுடையம்மன் கோயிலில் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் ராஜாத்தி சிறப்பு வழிபாடு செய்த பின்னா் பிரசாத்தை தொடங்கினாா்.

Story image

அப்போது மேள தாளம் முழங்கவும், தாரை தப்பட்டை ஒலிக்க, பொய்க்கால் குதிரை, சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழச்சிகள் நடைபெற்றன.

இதனை தொடா்ந்து பொன்னேரி ஹரிஹரன் கடை வீதியில் அவா் விவசாயி சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தாா். அப்போது மக்களுக்கு தேவையான. தரமான சாலை, குடிநீா், உயா்தர மருத்துவம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தாா். அவருடன் 100-க்கும் மேற்பட்ட கட்சியினா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.