இந்த சம்பவத்தில் ஒரு நகைமுரண் இருக்கிறது. 2008}இல் இதே சிட்னி மைதானத்தில் நடந்த டெஸ்ட் பந்தயத்தில், அப்போதைய இந்திய சுழல் பந்து வீரர் ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ சைமன்ஸýக்கு எதிராக மிக மோசமான தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அதைத் தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டபோது, ஆன்ட்ரூ சைமன்ஸ் பெருந்தன்மையுடன் விட்டுவிட்டதால் பிரச்னை முடிந்தது. அதே ஆன்ட்ரூ சைமன்ஸýக்கு எதிராக மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன ரீதியான கேலிகளை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எழுப்பியதும், அவரைத் தரக்குறைவாக விமர்சித்ததும் மறந்துவிடக் கூடியவையல்ல!