2019-இல், குற்றவியல் நீதிமன்ற நடுவரிடம் ஆஜர்படுத்துவதற்கு முன் 53 கைதிகளும், காவலில் இருக்கும்போது 32 பேரும் உயிரிழந்ததாக தேசிய குற்றவியல் ஆவண அறிக்கை கூறுகிறது. உயிரிழந்த 85 பேரில் 33 பேர் தற்கொலை செய்துகொண்டதாகவும், 36 பேர் உடல்நலக்குறைவால் இறந்ததாகவும், 14 பேர் விபத்து, கைதுக்கு முற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்ததாகவும், இரண்டே இரண்டு பேர் மட்டுமே காவல் நிலைய வன்முறையில் இறந்ததாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால், 2019-இல் காவல் நிலைய மரணங்களின் எண்ணிக்கை 117 என்று குறிப்பிடுகிறது தேசிய மனித உரிமை ஆணையம்.