மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

அண்ணாமலைப் பல்கலை தமிழியல்துறையில் மாணவர் நல மையம் திறப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறையில் இந்திய மொழிப்புலத்திற்கான மாணவர் நல மையத் திறப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :24 அக்டோபர் 2014, 3:16 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறையில் இந்திய மொழிப்புலத்திற்கான மாணவர் நல மையத் திறப்பு விழா நடைபெற்றது.

இந்திய மொழிப்புல முதல்வர் பேராசிரியர் முனைவர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். தமிழியல் துறைத் தலைவர் முனைவர் ப.ஞானம் வரவேற்றார். தமிழகஅரசு முதன்மைச் செயலரும், பல்கலைக்கழக நிர்வாகியுமான ஷிவ்தாஸ்மீனா மாணவர் நல மையத்தை திறந்து வைத்துப் பேசினார். அவர் பேசுகையில் மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுவதை குறிப்பிட்டார். விழாவில் பதிவாளர் ந.பஞ்சநதம், கலைப்புல முதல்வர் ராஜேந்திரன், அறிவியல் புல முதல்வர் முனைவர் சபேசன், இந்தித்துறை தலைவர் ஜெகநாதரெட்டி, மொழியியல் மைய இயக்குநர் முனைவர் ச.ராஜா, மொழிப்புல மாணவர் நல மைய அலுவலர் முனைவர் அரங்க.பாரி, கலைப்புல மாணவர் நல மைய அலுவலர் ரவி, அறிவியல் புல மாணவர் நல மைய அலுவலர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

கருத்தரங்க காட்சிப்பேழை திறப்பு விழா:

தமிழியல் துறையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய கருத்தரங்கம், பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. 2003 ஆண்டு முதல் 2014- ஆண்டு வரை நடைபெற்ற கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை நூலாக தொகுக்கப் பெற்று 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளாக பல்கலைக்கழகம் வெளிக்கொண்டு வந்துள்ளன. இக்கருத்தரங்கு ஆய்வுக்கோவைகளின் காட்சிப்பேழை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. தமிழியல்துறைத் தலைவர் முனைவர் ப.ஞானம் தலைமை வகித்தார். பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா காட்சிப்பேழையினை திறந்து வைத்துப் பேசினார். அவர் பேசுகையில் இதுபோன்ற காட்சிப்பேழைகளை அனைத்து புலத்திலும் நிறுவ வேண்டும் என கேட்டுக்கொண்டார். விழாவில் பதிவாளர் ந.பஞ்சநதம், மொழிப்புல முதன்மையர் வி.திருவள்ளுவன், பேராசிரியர் முனைவர் அரங்க.பாரி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.