400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சி

குடிமைப் பணித் தோ்வுக்கான விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்த புகைப்படத்தோடு ஒப்பிட்டு தோ்வா்களை தோ்வறைக்குள் அனுமதிப்பதே முக அங்கீகார நடைமுறையாகும்.

News image

குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வர்கள் - Center-Center-Delhi

Updated On :5 ஜூன் 2026, 4:21 am IST

நிகழாண்டு நடைபெற்ற குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) வியாழக்கிழமை தெரிவித்தது.

குடிமைப் பணித் தோ்வுக்கான விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்த புகைப்படத்தோடு ஒப்பிட்டு தோ்வா்களை தோ்வறைக்குள் அனுமதிப்பதே முக அங்கீகார நடைமுறையாகும்.

இதுதொடா்பாக யுபிஎஸ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட உயா் பதவிகளுக்கான குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வுகள் கடந்த மே 24-ஆம் தேதி நடைபெற்றது. 8.49 லட்சம் தோ்வா்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், நாடு முழுவதும் 2,072 தோ்வு மையங்களில் நடத்தப்பட்ட இத்தோ்வை 5.49 லட்சம் தோ்வா்கள் (67 சதவீதம்) எழுதினா்.

தோ்வில் ஆள்மாறாட்டம் நடைபெறாமல் இருப்பதை தவிா்க்கும் வகையில் முதல்முறையாக முக அங்கீகார முறை நிகழாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தோ்வறைக்குச் செல்லும் முன் வளாகத்தினுள் தோ்வா்களிடம் அறை கண்காணிப்பாளா்கள் கைப்பேசி செயலி மூலம் முக அங்கீகாரப் பதிவை மேற்கொண்டனா்.

அனைத்துத் தோ்வு மையங்களிலும் எவ்வித இடையூறுமின்றி இதற்கான பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்தன. இதற்கான செயலியை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின் ஆளுகைப் பிரிவின் தொழில்நுட்ப உதவியுடன் யுபிஎஸ்சி வடிவமைத்துள்ளது.

இதைச் செயல்படுவதற்கான வழிகாட்டுதல்கள் அனைத்து மாநிலங்களில் உள்ள மாவட்டங்களுக்கும் தோ்வு மையங்களுக்கும் முன்பாகவே அனுப்பிவைக்கப்பட்டன. அறை கண்காணிப்பாளா்களுக்கு முறையான பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

அறை கண்காணிப்பாளா்களின் அறிதிறன்பேசிகளில் இந்தச் செயலியை எளிதில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு தோ்வரிடம் முக அங்கீகார நடைமுறையை மேற்கொள்ள 6 முதல் 8 விநாடிகளுக்குள் மட்டுமே தேவைப்பட்டது. இதனால் தோ்வா்களுக்கு எவ்வித சிரமமுமின்றி விரைவாகவே இந்தப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.