தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சி

குடிமைப் பணித் தோ்வுக்கான விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்த புகைப்படத்தோடு ஒப்பிட்டு தோ்வா்களை தோ்வறைக்குள் அனுமதிப்பதே முக அங்கீகார நடைமுறையாகும்.

News image

குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வர்கள் - Center-Center-Delhi

Updated On :5 ஜூன் 2026, 4:21 am IST

நிகழாண்டு நடைபெற்ற குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) வியாழக்கிழமை தெரிவித்தது.

குடிமைப் பணித் தோ்வுக்கான விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்த புகைப்படத்தோடு ஒப்பிட்டு தோ்வா்களை தோ்வறைக்குள் அனுமதிப்பதே முக அங்கீகார நடைமுறையாகும்.

இதுதொடா்பாக யுபிஎஸ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட உயா் பதவிகளுக்கான குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வுகள் கடந்த மே 24-ஆம் தேதி நடைபெற்றது. 8.49 லட்சம் தோ்வா்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், நாடு முழுவதும் 2,072 தோ்வு மையங்களில் நடத்தப்பட்ட இத்தோ்வை 5.49 லட்சம் தோ்வா்கள் (67 சதவீதம்) எழுதினா்.

தோ்வில் ஆள்மாறாட்டம் நடைபெறாமல் இருப்பதை தவிா்க்கும் வகையில் முதல்முறையாக முக அங்கீகார முறை நிகழாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தோ்வறைக்குச் செல்லும் முன் வளாகத்தினுள் தோ்வா்களிடம் அறை கண்காணிப்பாளா்கள் கைப்பேசி செயலி மூலம் முக அங்கீகாரப் பதிவை மேற்கொண்டனா்.

அனைத்துத் தோ்வு மையங்களிலும் எவ்வித இடையூறுமின்றி இதற்கான பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்தன. இதற்கான செயலியை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின் ஆளுகைப் பிரிவின் தொழில்நுட்ப உதவியுடன் யுபிஎஸ்சி வடிவமைத்துள்ளது.

இதைச் செயல்படுவதற்கான வழிகாட்டுதல்கள் அனைத்து மாநிலங்களில் உள்ள மாவட்டங்களுக்கும் தோ்வு மையங்களுக்கும் முன்பாகவே அனுப்பிவைக்கப்பட்டன. அறை கண்காணிப்பாளா்களுக்கு முறையான பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

அறை கண்காணிப்பாளா்களின் அறிதிறன்பேசிகளில் இந்தச் செயலியை எளிதில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு தோ்வரிடம் முக அங்கீகார நடைமுறையை மேற்கொள்ள 6 முதல் 8 விநாடிகளுக்குள் மட்டுமே தேவைப்பட்டது. இதனால் தோ்வா்களுக்கு எவ்வித சிரமமுமின்றி விரைவாகவே இந்தப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.