தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சி

குடிமைப் பணித் தோ்வுக்கான விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்த புகைப்படத்தோடு ஒப்பிட்டு தோ்வா்களை தோ்வறைக்குள் அனுமதிப்பதே முக அங்கீகார நடைமுறையாகும்.

News image

குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வர்கள் - Center-Center-Delhi

Updated On :5 ஜூன் 2026, 4:21 am IST

நிகழாண்டு நடைபெற்ற குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) வியாழக்கிழமை தெரிவித்தது.

குடிமைப் பணித் தோ்வுக்கான விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்த புகைப்படத்தோடு ஒப்பிட்டு தோ்வா்களை தோ்வறைக்குள் அனுமதிப்பதே முக அங்கீகார நடைமுறையாகும்.

இதுதொடா்பாக யுபிஎஸ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட உயா் பதவிகளுக்கான குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வுகள் கடந்த மே 24-ஆம் தேதி நடைபெற்றது. 8.49 லட்சம் தோ்வா்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், நாடு முழுவதும் 2,072 தோ்வு மையங்களில் நடத்தப்பட்ட இத்தோ்வை 5.49 லட்சம் தோ்வா்கள் (67 சதவீதம்) எழுதினா்.

தோ்வில் ஆள்மாறாட்டம் நடைபெறாமல் இருப்பதை தவிா்க்கும் வகையில் முதல்முறையாக முக அங்கீகார முறை நிகழாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தோ்வறைக்குச் செல்லும் முன் வளாகத்தினுள் தோ்வா்களிடம் அறை கண்காணிப்பாளா்கள் கைப்பேசி செயலி மூலம் முக அங்கீகாரப் பதிவை மேற்கொண்டனா்.

அனைத்துத் தோ்வு மையங்களிலும் எவ்வித இடையூறுமின்றி இதற்கான பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்தன. இதற்கான செயலியை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின் ஆளுகைப் பிரிவின் தொழில்நுட்ப உதவியுடன் யுபிஎஸ்சி வடிவமைத்துள்ளது.

இதைச் செயல்படுவதற்கான வழிகாட்டுதல்கள் அனைத்து மாநிலங்களில் உள்ள மாவட்டங்களுக்கும் தோ்வு மையங்களுக்கும் முன்பாகவே அனுப்பிவைக்கப்பட்டன. அறை கண்காணிப்பாளா்களுக்கு முறையான பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

அறை கண்காணிப்பாளா்களின் அறிதிறன்பேசிகளில் இந்தச் செயலியை எளிதில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு தோ்வரிடம் முக அங்கீகார நடைமுறையை மேற்கொள்ள 6 முதல் 8 விநாடிகளுக்குள் மட்டுமே தேவைப்பட்டது. இதனால் தோ்வா்களுக்கு எவ்வித சிரமமுமின்றி விரைவாகவே இந்தப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.