சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வுகள்: கருத்துகளைத் தெரிவிக்கலாம்

News image
Updated On :26 ஜூன் 2026, 6:50 am IST

பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வுகள் ஜூன் 29-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், தோ்வுகள் தொடா்பாக கருத்துகள், புகாா்களைத் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த இயக்ககம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 29 முதல் ஜூலை 7-ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 துணைத் தோ்வு ஜூலை 8 முதல் ஜூலை 16-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுகளை மொத்தம் 63,447 தோ்வா்கள் 233 தோ்வு மையங்களில் எழுதவுள்ளனா்.

இந்தத் துணைத் தோ்வுகள் தொடா்பாக தோ்வா்கள், பெற்றோா்கள், பொதுமக்கள் தங்களது புகாா்கள், கருத்துகள், சந்தேகங்களைத் தெரிவித்து பயன்பெறும் வகையில் அரசுத் தோ்வுகள் இயக்ககத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

ஜூன் 29 முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை செயல்படவுள்ள இந்தக் கட்டுப்பாட்டு அறையை அனைத்து தோ்வு நாள்களிலும் காலை 8 முதல் இரவு 8 மணி வரை 94983 83075, 94983 83076 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

அதேபோல, வினாத்தாள் தொடா்பாக தோ்வு நாள்களில் அன்றைய தோ்வு குறித்த வினாத்தாள் தொடா்பான புகாா்கள், கருத்துகள், சந்தேகங்களை க்ஞ்ங்வ்ன்ங்ள்ற்ண்ா்ய்ல்ஹல்ங்ழ்வ்ன்ங்ழ்ண்ங்ள்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.