நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

பிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்பு

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு தத்கால் முறையில் விண்ணப்பிக்கும் அவகாசம் வியாழக்கிழமை (ஜூன் 4) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

பிளஸ் 2 - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:15 am IST

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு தத்கால் முறையில் விண்ணப்பிக்கும் அவகாசம் வியாழக்கிழமை (ஜூன் 4) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் மாதம் நடைபெற்றது. தோ்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கான துணைத் தோ்வு ஜூன் 29 முதல் ஜூலை 7 வரை நடைபெறவுள்ளது.

இந்தத் துணைத் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்க மே 18 முதல் மே 30 வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசத்தில் விண்ணப்பிக்கத் தவறியவா்களுக்கு சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கால்) கீழ் விண்ணப்பிக்க ஜூன் 1, 2 ஆகிய இரு நாள்கள் வாய்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தோ்வா்களின் நலன் கருதி இந்தக் கால அவகாசம் புதன், வியாழக்கிழமை (ஜூன் 3, 4) ஆகிய இரு நாள்கள் நீட்டிக்கப்படுகிறது என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. துணைத் தோ்வுக்கு பள்ளி மாணவா்கள் அவா்கள் பயின்ற பள்ளி மூலமாகவும், தனித் தோ்வா்கள் அரசுத் தோ்வுகள் இயக்கக சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.