தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

கல்லூரி மாணவர்களுக்கு சிங்கப்பூர் பல்கலை வழங்கும் ஐஆர்ஐஎஸ் இன்டர்ன்ஷிப்!

கல்லூரி மாணவர்களுக்கு சிங்கப்பூர் பல்கலை வழங்கும் ஐஆர்ஐஎஸ் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் விண்ணப்பிக்க..

News image

இன்டர்ன்ஷிப் திட்டம் - NUS website

Updated On :19 ஜனவரி 2026, 2:48 pm IST

சிங்கப்பூர் பல்கலைக்கழகமானது, சர்வதேச மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் (IRIS) 2026 திட்டத்தை அறிவித்திருக்கிறது. இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் கல்லூரி மாணவர்கள், சர்வதேச இன்டர்ன்ஷிப் வாய்ப்பைப் பெறலாம்.

தேசிய சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில், இன்டர்ன்ஷிப் மற்றும் ஆராய்ச்சி இம்மர்ஷன் (IRIS) படிக்க விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன. இது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சர்வதேச மாணவர்களுக்கு வழங்கும் ஒரு அற்புதமான இன்டர்ன்ஷிப் வாய்ப்பாக உள்ளது.

இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பயில உலகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த இன்டர்ன்ஷிப் திட்டம் சிறந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கிறது. மேலும், ஆராய்ச்சி இன்டர்ன்ஷிப் திட்டம் அனைத்து கல்வித் துறைகளுக்கும் பொதுவானது. எனவே ஒருவர் சர்வதேச அளவில் வெளிநாடு சென்று அங்கு கல்வி பயிலும் வாய்ப்பைத் தேடுபவராக இருந்தால், இது அவர்களுக்கான ஒரு சரியான வாய்ப்பு என்கிறார்கள்.

இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், உலகத் தரம் வாய்ந்த ஒரு பல்கலையில், அனுபவம் வாய்ந்த் பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் ஆராய்ச்சியில் ஈடுபடலாம். ஏற்கனவே, சிங்கப்பூர் பல்கலைக்கழகம் செய்து வரும் பல்வேறு திட்டங்களில் இணைந்து பணியாற்றவும், புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த கோடைகால இன்டர்ன்ஷிப் பயிற்சித் திட்டம் மாணவர்களின் தகவல் தொடர்புத் திறனையும் மேம்படுத்த உதவும் என்பது கூடுதல் அம்சம்.

இந்த இன்டர்ன்ஷிப் 2 மாதங்களைக் கொண்டது. 2026ஆம் ஆண்டு மே முதல் ஜூலை அல்லது ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை. இது முழுக்க முழுக்க நிதியுதவியுடன் கூடிய இன்டர்ன்ஷிப். பயணச் செலவுக்கான நிதியுதவி, தங்கும் வசதி மற்றும் மாதம் இன்டர்ன்ஷிப் தொகையும் வழங்கப்படுகிறது. இதில், தொழிற்சாலை ஆய்வு, நகர சுற்றுலா, தொழிற்துறையினருடன் கலந்துரையாடல் உள்ளிட்டவையும் அடங்கும். விண்ணப்பக் கட்டணம் கிடையாது. ஐஇஎல்டிஎஸ் தேர்வுத் தகுதி தேவையில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.