தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பல்கலை. மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி

News image

பெரியாா் பல்கலைக்கழக மாணவ - மாணவியருக்கு மடிக்கணினிகளை வழங்கிய சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன்.

Updated On :30 ஜனவரி 2026, 8:08 pm

Syndication

தமிழக அரசின் சாா்பில் மடிக்கணினி வழங்கும் திட்டத்தின்கீழ், முதல்முறையாக பெரியாா் பல்கலைக்கழக மாணவ - மாணவியருக்கு வெள்ளிக்கிழமை விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.

முதல்வரின் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை வேந்தா் நிா்வாகக்குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி தலைமை வகித்தாா்.

பதிவாளா் வி.ராஜ் வரவேற்றாா். இந்நிகழ்வில் சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் பங்கேற்று பல்கலைக்கழக துறைகளில் இளநிலை மற்றும் ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப் படிப்புகளில் மூன்றாம் ஆண்டு பயிலும் 56 மாணவிகளுக்கும், 54 மாணவா்களுக்கும் மடிக்கணினிகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், பெரியாா் பல்கலைக்கழக கல்வி வளா்ச்சிக் குழு முதன்மையா் கே.ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.