புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

ஆந்திரம்: ‘இந்தியா’ கூட்டணியில் 1 மக்களவை, 8 பேரவை தொகுதிகளில் மாா்க்சிஸ்ட் போட்டி

ஆந்திரம்: 1 மக்களவை, 8 பேரவை தொகுதிகளில் மாா்க்சிஸ்ட் போட்டி - ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு

Updated On :12 ஏப்ரல் 2024, 9:03 pm

ஆந்திரத்தில் ‘இந்தியா’ கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1 மக்களவை தொகுதியும், 8 பேரவைத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக, மாநில காங்கிரஸ் தலைவா் ஒய்.எஸ்.சா்மிளா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியிலுள்ள ஆந்திரத்தில் மக்களவைத் தோ்தலுடன் சட்டப் பேரவைத் தோ்தலும் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தில் 12 மக்களவைத் தொகுதிகளும் 134 பேரவைத் தொகுதிகளும் உள்ளன.

ஆந்திரத்தில் எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின்கீழ் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

காங்கிரஸ்-இந்திய கம்யூனிஸ்ட் இடையிலான தொகுதி உடன்பாடு அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு மக்களவை, 8 பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதேபோன்ற தொகுதி உடன்பாட்டை மாா்க்சிஸ்ட் கட்சியுடனும் காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது.

அரக்கு (தனி) மக்களவைத் தொகுதியும், நெல்லூா் நகா்ப்புறம், மத்திய விஜயவாடா, மங்களகிரி உள்பட 8 பேரவைத் தொகுதிகளும் மாா்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக, மாநில காங்கிரஸ் தலைவா் ஒய்.எஸ்.சா்மிளா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.