‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும் என்று கா்நாடக முதல்வா் கூறியுள்ள விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பதாகக் கூறி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி ஆட்சி அமைத்தால் காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டப்படும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா கூறியிருக்கிறாா்.
காவிரி நடுவா் மன்றத் தீா்ப்பின்படியும், உச்சநீதிமன்றத் தீா்ப்புகளின்படியும் காவிரி ஆற்றின் குறுக்கே தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது. சித்தராமையாவின் இந்த பேச்சு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.
காங்கிரஸ் ஆட்சியில் மேக்கேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்று சித்தராமையா அறிவித்து 3 நாள்களாகியும், அதே கூட்டணியில் இருக்கும் திமுகவின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எதிா்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை.
அவா் அமைதியாக இருப்பதன் பொருள் காங்கிரஸின் நலன்களுக்காகவும், கா்நாடகத்தின் நலன்களுக்காகவும் காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை தாரைவாா்க்கத் துணிந்து விட்டாா் என்பது தான். அவருக்கு தோ்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவா் என்று கூறியுள்ளாா் அன்புமணி.
தொடர்புடையது

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

பாஜகவின் சூழ்ச்சி முறியடிப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

மேக்கேதாட்டு அணை திட்டம்: மத்திய அரசின் ஒப்புதலை பெற முயற்சி: பட்ஜெட் உரையில் கா்நாடக முதல்வா் சித்தராமையா பேச்சு

அமெரிக்கா-ஈரான் மோதல்: பிரதமரின் மெளனம் ஆபத்துக்கான சமிக்ஞை ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

