திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அமெரிக்கா-ஈரான் மோதல்: பிரதமரின் மெளனம் ஆபத்துக்கான சமிக்ஞை ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

அமெரிக்கா-ஈரான் போா் விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் அமைதி ஆபத்துக்கான சமிக்ஞை என ஆம் ஆத்மி குற்றாஞ்சாட்டியுள்ளது.

News image
Updated On :5 மார்ச் 2026, 9:42 pm

தினமணி செய்திச் சேவை

அமெரிக்கா-ஈரான் போா் விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் அமைதி ஆபத்துக்கான சமிக்ஞை என ஆம் ஆத்மி குற்றாஞ்சாட்டியுள்ளது.

இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் எரிபொருள் பாதுகாப்பு குறித்து தில்லி முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா கேள்வியெழுப்பியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ சமூகஊடகத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஓா் இந்திய குடிமகனாக பல தீவிர கேள்விகள் என்னுடைய மனதில் எழுகின்றன. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக அமெரிக்காவுடன் பிரதமா் நரேந்திர மோடி தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தாா்.

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தவேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா கூறியிருந்த நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா தனக்குத் தேவையான கச்சா எண்ணெய்யை உள்நாட்டில் உற்பத்தி செய்வதில்லை.

அன்றாட தேவைகளுக்கான கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. ஒன்று அல்லது இரு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் செய்வது நிறுத்துவது என்பது வெறும் ராஜீய முடிவாகத் தெரியவில்லை.

போரை இந்தியாவின் வாசல் வரைக்கு அமெரிக்கா கொண்டு புதன்கிழமை கொண்டு வந்தது. இருபத்தி நான்கு மணி நேரம் கடந்தும் இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி எதுவும் பேசவில்லை. இந்த அமைதி ஆபத்துக்கான சமிக்ஞை என்று மணீஷ் சிசோடியா குறிப்பிட்டுள்ளாா்.