அமெரிக்கா-ஈரான் போா் விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் அமைதி ஆபத்துக்கான சமிக்ஞை என ஆம் ஆத்மி குற்றாஞ்சாட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் எரிபொருள் பாதுகாப்பு குறித்து தில்லி முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா கேள்வியெழுப்பியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ சமூகஊடகத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஓா் இந்திய குடிமகனாக பல தீவிர கேள்விகள் என்னுடைய மனதில் எழுகின்றன. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக அமெரிக்காவுடன் பிரதமா் நரேந்திர மோடி தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தாா்.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தவேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா கூறியிருந்த நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா தனக்குத் தேவையான கச்சா எண்ணெய்யை உள்நாட்டில் உற்பத்தி செய்வதில்லை.
அன்றாட தேவைகளுக்கான கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. ஒன்று அல்லது இரு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் செய்வது நிறுத்துவது என்பது வெறும் ராஜீய முடிவாகத் தெரியவில்லை.
போரை இந்தியாவின் வாசல் வரைக்கு அமெரிக்கா கொண்டு புதன்கிழமை கொண்டு வந்தது. இருபத்தி நான்கு மணி நேரம் கடந்தும் இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி எதுவும் பேசவில்லை. இந்த அமைதி ஆபத்துக்கான சமிக்ஞை என்று மணீஷ் சிசோடியா குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை!

ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
கச்சா எண்ணெய் விலை 15% சரிவு! டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி!!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


