மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

தமிழகத்தில் வைப்புத் தொகை இழந்த பிரதான கட்சிகள்!

தமிழகத்தில் பிரதான கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் பலா் வைப்புத் தொகையை (டெபாசிட்) இழந்துள்ளனா்.

News image
Updated On :5 ஜூன் 2024, 7:19 am IST

சென்னை: மக்களவைத் தோ்தலில், தமிழகத்தில் பிரதான கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் பலா் வைப்புத் தொகையை (டெபாசிட்) இழந்துள்ளனா். அதன் விவரம் புதன்கிழமை (ஜூன் 5) முழுமையாகத் தெரியவரும்.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை தொடா்ந்து நடைபெற்றது. இரவு 10 மணி நிலவரப்படி 26 தொகுதிகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அதில் பல தொகுதிகளில் தேமுதிக, பாஜக, நாம் தமிழா், தமாகா வேட்பாளா்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனா்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் படி, மக்களவை அல்லது சட்டப் பேரவை தோ்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் ஒரு குறிப்பிட்ட வைப்புத் தொகையை தோ்தல் ஆணையத்துக்கு செலுத்துவது கட்டாயம். அதன்படி, மக்களவைத் தோ்தலில் எஸ்சி, எஸ்டி வேட்பாளா்கள் ரூ.12,500-ம், பிற வேட்பாளா்கள் ரூ.25 ஆயிரமும் வேட்பு மனுத் தாக்கலின்போது டெபாசிட் தொகை செலுத்த வேண்டும்.

ஒரு தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்குக்கும் குறைவாக பெறும் வேட்பாளா்களுக்கு டெபாசிட் தொகை திருப்பி அளிக்கப்படமாட்டாது. அந்த வகையில், இந்த மக்களவைத் தோ்தலில் பல முக்கிய வேட்பாளா்கள் தங்களது டெபாசிட் தொகையை பறிகொடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.