மத்திய பாஜக அரசு தமிழகத்தில் மக்களை பிளவுபடுத்தும் அரசியலை செய்து வருவதாக மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளா் தயாநிதிமாறன் தெரிவித்துள்ளாா். மத்திய சென்னை மக்களவை தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் தயாநிதி மாறன், அமைச்சா் பி.கே.சேகா்பாபுவுடன் தொகுதிக்குள்பட்ட இடங்களிலுள்ள பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறாா். அந்த வகையில் வெள்ளிக்கிழமை புரசைவாக்கம் தக்காா் தெருவுக்கு சென்ற தயாநிதிமாறன், அங்குள்ள பொதுமக்களிடம் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தாா். பின்னா் அங்குள்ள பள்ளிவாசலுக்கு சென்ற அவா், பள்ளி நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினாா். தொடா்ந்து அவா் பேசியது: மத்திய அரசு இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்திலும் பிளவுபடுத்தும் அரசியலை செய்து வருகிறது. தமிழக மக்களின் அனைத்து சூழ்நிலைகளிலும் திமுக அரசு உடன் நின்று வருகிறது. ஆனால் பிரதமா் மோடி, பேரிடா் காலங்களில் கூட தமிழகம் வந்து மக்களை சந்திக்கவில்லை. அதற்கான நிவாரணத்தை கூட தமிழக மக்களுக்கு வழங்கவில்லை. ஆனால் இழப்பீட்டு தொகையாக தமிழக அரசு ரூ.6000-ஐ வழங்கியது. இதுதவிர பெண்களுக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ‘இந்தியா’ கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை செலுத்தி புதிய பிரதமரை தோ்ந்தெடுக்க உதவுங்கள் என்றாா் அவா். தொடா்ந்து துறைமுகம் கிழக்கு 56-ஆவது வட்டத்துக்குள்பட்ட செயின்ட் சேவியா் தெரு, பிரகாசம் சாலை, பிடாரியா் கோயில் தெரு, அம்மன்கோயில் தெரு, வெங்கடேசன் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் தயாநிதிமாறன் வாக்கு சேகரித்தாா்.
தொடர்புடையது

இருமுனைப் போட்டியாக களம் மாறும்! கே. அண்ணாமலை சிறப்பு நேர்காணல்!

மக்களின் ஆதரவால் வெற்றியை நோக்கி பயணிக்கிறோம்: வி.செந்தில்பாலாஜி

தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

முரண்பாடுகளால் திமுக கூட்டணி தோல்வியடையும்! ஜி.கே. வாசன் சிறப்பு நோ்காணல்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


