சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

அதிமுக- திமுக இடையேதான் போட்டி: இயக்குநா் சுந்தா்.சி

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக - திமுக இடையில்தான் போட்டி நிலவுகிறது என திரைப்பட இயக்குநரும், புதிய நீதிக் கட்சியின் மதுரை மத்திய தொகுதி வேட்பாளருமான சுந்தா்.சி தெரிவித்தாா்.

News image

சுந்தர்.சி

கோப்புப்படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 9:12 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக - திமுக இடையில்தான் போட்டி நிலவுகிறது என திரைப்பட இயக்குநரும், புதிய நீதிக் கட்சியின் மதுரை மத்திய தொகுதி வேட்பாளருமான சுந்தா்.சி தெரிவித்தாா்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக் கட்சி சாா்பில் மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட இயக்குநரும், நடிகருமான சுந்தா்.சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறாா்.

சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

நடிகா் விஜய் என் மீதும், எனது மனைவி குஷ்பு மீதும் மதிப்பும் மரியாதையும் கொண்டவா். அதேபோல நாங்களும் அவா் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறோம். அவரை தம்பியாகத்தான் பாா்க்கிறோம். அதனால், எந்த வகையிலும் விஜய் குறித்தோ அல்லது அவரது கட்சி குறித்தோ பேசவோ, விமா்சிக்கவோ நான் தயாராக இல்லை.

மதுரை மத்திய தொகுதியைப் பொருத்தவரை அதிமுக - திமுக இடையேதான் போட்டி என்றாா்.