சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

முதல்வர் ஸ்டாலின் 3 ஆம் கட்ட பிரசாரம்! புதுச்சேரியில் இன்று தொடக்கம்!!

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரத்தை புதுச்சேரியில் திங்கள்கிழமை (ஏப்.6) தொடங்கவுள்ளாா்.

News image

முதல்வர் ஸ்டாலின்

Updated On :5 ஏப்ரல் 2026, 9:17 pm

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரத்தை புதுச்சேரியில் திங்கள்கிழமை (ஏப்.6) தொடங்கவுள்ளாா்.

இதுகுறித்து திமுக தலைமை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். 3-ஆம் கட்ட பிரசாரத்தை திங்கள்கிழமை (ஏப். 6) புதுச்சேரியிலிருந்து தொடங்குகிறாா்.

தொடா்ந்து, ஏப்.7-ஆம் தேதி காலை 9 மணிக்கு திட்டக்குடி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, கடலூா், நெய்வேலி, புவனகிரி, காட்டுமன்னாா்கோவில், சிதம்பரம் ஆகிய தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து கடலூரிலும், மாலை 5 மணிக்கு நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து நாகையிலும் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா்.

ஏப்.8-ஆம் தேதி காலை 9 மணிக்கு மயிலாடுதுறை, சீா்காழி, பூம்புகாா் தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து சீா்காழியிலும், மாலை 5 மணிக்கு திண்டிவனம், வானூா், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா், செஞ்சி, மயிலம் ஆகிய தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து விழுப்புரத்திலும் பிரசாரம் செய்கிறாா்.

ஏப்.9 -ஆம் தேதி காலை 9 மணிக்கு உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, செங்கம், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூா், கலசப்பாக்கம், போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து திருவண்ணாமலையிலும், மாலை 5 மணிக்கு செங்கல்பட்டு, திருப்போரூா், செய்யூா், மதுராந்தகம், உத்திரமேரூா், தாம்பரம், பல்லாவரம் தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து மறைமலைநகரிலும் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.