தேர்தலுக்கு முன்னதாக என்னை சுற்றியிருப்பவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள் என்று தவெக தலைவர் விஜய் புதன்கிழமை தெரிவித்தார்.
திருநெல்வேலியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
“கரூர் விவகாரம் பற்றி அனைவருக்கும் தெரியும், இருந்தாலும் என் மேல் பழிப் போட்டார்கள். மக்கள் மத்தியில் எடுபடாததால் ஜன நாயகனை முடக்கினார்கள். யார் முடக்கினார்கள் என்பது உங்களுக்கே தெரியும். அதுவும் எடுபடாததால் விஜய்க்கு மட்டும் தனியாக விதிமுறைகள் போட்டார்கள்.
தற்போது இத்தனை ஆண்டுகளாக காத்திருந்து சுற்றி இருப்பவர்களை வைத்து அவதூறு பரப்பினார்கள். அதுவும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. எத்தனை சோதனைகள் கொடுத்தாலும் திமுக, பாஜகவினரால் என்னை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது.
234 தொகுதியிலும் விஜய்தான் வேட்பாளர்கள். நமது வேட்பாளர்கள் அனைவரும் நமது குடும்பத்தில் இருப்பவர்களைதான் தேர்வு செய்துள்ளேன். விஜய்தான் வேட்பாளர், வேட்பாளர்தான் விஜய்.
இதுபோன்ற தேர்தலை இந்தியாவே பார்த்திருக்காது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தல் கிடையாது. 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசய தேர்தல் இது. காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் போன்று யாரும் வந்துவிட மாட்டார்களா என நீங்கள் காத்திருப்பது தெரியும். முத்துராமலிங்கர், வீரன் சுந்தரலிங்கம், வஉசி, கட்டபொம்மன், ஒண்டிவீரன் மாதிரி தவெக ஆட்சி செய்யும்.” எனத் தெரிவித்தார்.
Summary
"They are spreading slander using the people around me!" — Vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் தில்லி பயணம்!

விஜய் பதவியேற்பு விழா: த்ரிஷா உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்பு!

முதல்வர் விஜய் அமைச்சரவை! புதிய அமைச்சர்கள் யார், யார்?

நேரு விளையாட்டு அரங்கில் தவெக தலைவர் விஜய்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


