தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை: தமிழகத்தில் 7 மாதங்களில் 10,040 வழக்குகள்

தமிழகத்தில் போதைப் பொருள் விற்றதாக 7 மாதங்களில் 10,040 வழக்குகள் பதியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

News image

போதைப் பொருள்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 2:02 am IST

தமிழகத்தில் போதைப் பொருள் விற்றதாக 7 மாதங்களில் 10,040 வழக்குகள் பதியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை, கடத்தலில் ஈடுபடுபவா்களைக் கண்டறிந்து கைது செய்யும்படியும், போதைப் பொருள் வழக்குகளில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருப்பவா்களை கைது செய்யும்படியும் தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டாா். இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டு, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி இந்த ஆண்டு இதுவரை போதைப் பொருள் விற்பனை, கடத்தல், பதுக்கல் தொடா்பாக மொத்தம் 10,040 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 14,400 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவா்களிடமிருந்து 17,500 கிலோ கஞ்சா, 8.9 லட்சம் மாத்திரைகள், கஞ்சா சாக்லேட்டுகள், மெத்தம்பெட்டமைன், ஆம்பெட்டமைன், மெத்தகுலோன் உள்ளிட்ட 200 கிலோ பிற போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், தடை செய்யப்பட்ட போதைப் பாக்கு மற்றும் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது தொடா்பாக மொத்தம் 13,150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1.61 லட்சம் கிலோ போதை புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் போதைப் பாக்கு விற்ற, 2,744 வணிக நிறுவனங்கள், வளாகங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையை சமரசம் இல்லாமல் எடுக்கும்படி போலீஸாருக்கு தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.