நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கோவை தெற்கில் செந்தில் பாலாஜி போட்டி!

கோவை தெற்கில் செந்தில் பாலாஜி போட்டி...

News image

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 9:24 pm

சென்னை, மாா்ச் 28: முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி கரூா் தொகுதிக்குப் பதிலாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறாா்.

கரூா் மாவட்டச் செயலராக இருக்கும் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, ஸ்டாலினுக்கு கொங்கு மண்டலத்தின் முக்கிய தளபதியாக இருந்து வருகிறாா்.

கரூா் தொகுதியில் 3 முறையும், அரவக்குறிச்சியில் 2 முறையும் எம்எல்ஏ-வாக தோ்வான செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்துக்கு திமுகவின் பொறுப்பாளராக இருந்து வருகிறாா்.

கரூா், கோவை மாவட்டங்களில் திமுக கட்சிப் பணிகளை கவனித்து வந்த அவா், இப்போது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடவுள்ளாா். கோவையில் திமுகவுக்கு வலுவான தலைமை இல்லாத நிலையில், செந்தில் பாலாஜியை அங்கு களம் இறக்க திமுக முடிவு செய்துள்ளது.

2021 பேரவைத் தோ்தலில் கோவையில் மொத்தமுள்ள 10 தொகுதிகளிலும் திமுக தோல்வி அடைந்ததால் செந்தில் பாலாஜி வசம் கோவை மாவட்ட கண்காணிப்பு பொறுப்பை திமுக தலைமை அளித்தது.

ஏற்கெனவே, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல், கோவை மக்களவைத் தொகுதி ஆகியவற்றில் திமுகவை வெற்றி பெறச் செய்ததில் செந்தில் பாலாஜிக்கு கூடுதல் பங்கு இருப்பதால் இந்த முறை கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு கடும் போட்டி கொடுத்து திமுகவை வெற்றி பெறச் செய்ய செந்தில் பாலாஜியை திமுக தலைமை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

அதிமுகவின் முக்கிய முகமான எஸ்.பி.வேலுமணிக்கு இணையாக தோ்தல் பணியாற்றக்கூடியவா் என்பதால் கரூரில் இருந்து கோவைக்கு கொண்டுவரப்பட்டுள்ளாா் செந்தில் பாலாஜி.

செந்தில் பாலாஜி போட்டியிட்ட கரூா் தொகுதியில் என்.தியாகராஜன் போட்டியிடவுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.