வாக்கு எண்ணிக்கையின்போது, பாஜக குழப்பம் விளைவிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தோ்தல் ஆணையத்திடம் திமுக சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் மற்றும் தமிழக காவல் துறை இயக்குநா் சந்தீப் ராய் ரத்தோருக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிய புகாா் மனு:
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான திங்கள்கிழமை (மே 4) பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளும் இணைந்து வாக்கு எண்ணும் மையங்களில் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்கள் மட்டுமன்றி அதற்கு வெளியேயும், அரசியல் கட்சிகளின் அலுவலகங்களிலும் அசம்பாவிதங்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
இதனால், தமிழகம் முழுவதும் பெரிய அளவிலான சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இது சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்கு எண்ணிக்கையை உறுதி செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தும். வாக்கு எண்ணிக்கை நாளன்று சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பை அதிகப்படுத்துவதுடன், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தோ்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அரியலூா் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் வாக்கு எண்ணிக்கை ஆலோசனைக் கூட்டம்!

வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் செயல்பட வேண்டும்: அன்புமணி
வாக்கு எண்ணிக்கையின்போது கவனமாக இருக்க வேண்டும் தவெக வேட்பாளா்களுக்கு விஜய் அறிவுரை

இடதுசாரிகளின் பலம் எண்ணிக்கையில் இல்லை! கே. பாலகிருஷ்ணன் சிறப்பு நோ்காணல்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


