வாக்காளர்களிடம் வேட்பாளர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள அவர்களது கட்சிப் பெயருடன், சின்னங்கள் அவசியமான ஒன்றாகிவிட்டன.
அதனால்தான் ஏதேனும் காரணத்துக்காக சின்னங்களை தேர்தல் ஆணையம் முடக்க முயல்வதும், தேர்தல் சின்னத்தை இழப்பதால் வாக்கு வங்கியை இழக்கும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தேர்தல் ஆணையத்திடம் போராடி சின்னத்தை மீட்டெடுப்பதுமே கட்சிகளின் வாடிக்கை.
பாஜகவின் முன்னோடிக் கட்சி ஜனசங்கமாகும். 1951-ஆம் ஆண்டு பாரதிய ஜனசங்கம் தொடங்கியபோது அக்கட்சியின் சின்னமாக தீபம் (விளக்கு) சின்னம் இருந்தது.

இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைக்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதா கட்சி உருவாகியது. அதில் ஜனசங்கம் இணைந்தது. பிறகு பிரிந்து, 1980-இல் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியாகப் புது அடையாளம் பெற்றது. அப்போது அக்கட்சி தாமரைச் சின்னத்தைப் பெற்றது. அன்று தொடங்கி இன்று வரை தாமரை சின்னத்தை பாஜக தக்க வைத்துக் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!

அயோத்தி நன்கொடை திருட்டு விவகாரம்! எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

செங்கல்பட்டில் ஆக. 14ல் உள்ளூர் விடுமுறை!

தடை தாண்டுதல்: இறுதிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்த இந்திய வீராங்கனை!
விடியோக்கள்

அனுபவம் இல்லையா? அக்கறையில்லையா?: முதல்வரை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார் | ADMK | TVK



