கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சமையல் டிப்ஸ்...

தேங்காய்ப்பால் எடுப்பதற்கு தேங்காய்த்துருவலை அரைக்கும் போது வெந்நீர் தெளித்து அரைத்தால், பால் கெட்டியாகக் கிடைக்கும்.

News image
Updated On :15 மார்ச் 2026, 12:51 pm

தினமணி செய்திச் சேவை

தேங்காய்ப்பால் எடுப்பதற்கு தேங்காய்த்துருவலை அரைக்கும் போது வெந்நீர் தெளித்து அரைத்தால், பால் கெட்டியாகக் கிடைக்கும்.

புளித்த மோர் இருந்தால், அதில் புழுங்கல் அரிசியும், உளுந்தம் பருப்பும் ஒரு மணி நேரம் ஊற வைத்து, தோசை மாவு பதத்துக்கு அரைத்து உடனே தோசை வார்க்கலாம். மாவு பொங்க வேண்டிய அவசியமில்லை. தோசை சுவை மிகுந்து இருக்கும்.

வெண்டைக்காய், பீன்ஸ் போன்ற காய்கள் முற்றலாக இருந்தால் தூக்கி எறிய வேண்டாம். அவற்றைத் துண்டுகளாக்கி தண்ணீரில் போட்டுக் கொதிக்க விடுங்கள். பிறகு வடிகட்டி உப்பு, மிளகு, சீரகப்பொடி சேர்த்து சூப்பாக அருந்தலாம்.

பச்சை மிளகாய் சேர்த்து சட்னி முதலியவற்றை அரைக்கும் போது முதலில் மிளகாயைத் துண்டுகளாக்கி வெந்

நீரில் போடவும். சற்று ஆறியதும் எடுத்து அரைத்தால் மிளகாய் நன்கு மசிவதுடன், சட்னி வெகு நேரம் கெட்டுப்போகாமலும் இருக்கும்.

Story image

கத்தரிக்காய், வாழைக்காய் போன்ற காய்கள் நறுக்கியதுமே கறுத்து விடும். இதைத் தவிர்க்க, தண்ணீரில் இரண்டு கரண்டி மோரை ஊற்றி, அதில் அந்தக் காய்கறித்துண்டுகளைப் போட்டால் காய்கள் சமைக்கும் வரை நிறம் மாறாமல் இருக்கும்.

-ஆர். கீதா, ஆலுவா.

 முந்திரி, பாதாம், கசகசா இவற்றை நீரில் ஊறவைத்து ஃபிரிட்ஜில் வைத்து பிறகு அரைத்தால் சீக்கிரம் அரைபடும்.

 சாதம் குழைந்து விட்டால் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கரண்டி காம்பால் கிளற பொல பொல என்றாகும்.

 சேமியா பாயசம் செய்யும் போது சேமியா வெந்ததும் ஒரு டம்ளர் குளிர்ந்த நீர்விட்டு பின் சர்க்கரை, பால் சேர்த்து செய்தால் சேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டாது .

இட்லிப் பொடி செய்யும் போது ஒரு தேக்கரண்டி தனியாவை வறுத்து சேர்த்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

-நாகஜோதி கிருஷ்ணா, சென்னை-5.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.