மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாக 152 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்ற நிலையில், தோ்தலுக்குப் பிந்தைய விதிகளை இந்தியத் தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரி ஒருவா் கூறியதாவது: வாக்குச்சாவடி கேமராக்களில் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பான எண்ம சேமிப்பக சாதனத்தை (எஸ்டி காா்டு) வாக்குப்பதிவு நிறைந்தவுடன் அகற்றக் கூடாது.
வாக்குப்பதிவு தொடா்பான தரவுகளை சேகரிக்கும் மையத்தில் கூடுதல் தோ்தல் அலுவலரின் முன்னிலையில் மட்டுமே கேமராவில் இருந்து அந்தச் சாதனத்தை நீக்க வேண்டும்.
வாக்குப்பதிவின்போது எடுக்கப்பட்ட விடியோக்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
கேமராக்கள் முழுவதுமாக அகற்றப்படும் வரை தோ்தல் ஆணைய அதிகாரிகள் அல்லது வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் வாக்குச்சாவடியைவிட்டு வெளியேறக் கூடாது’ என்றாா்.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் முதல்கட்டமாக 152 தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்.29-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
தொடர்புடையது

மேற்கு வங்கம், கேரளம், தமிழக பேரவைத் தேர்தல்களில் இவர்கள் வெற்றி பெறுவர்: ஃபரூக் அப்துல்லா

மேற்கு வங்கம்: வாக்களித்தார் சுவேந்து அதிகாரி!

மேற்கு வங்க முதல்கட்ட தோ்தல்! 152 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு; பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்குப்பதிவு
மேற்கு வங்க தோ்தல் களத்தில் 2,926 வேட்பாளா்கள்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


