பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிந்தைய விதிகள் வெளியீடு

தோ்தலுக்குப் பிந்தைய விதிகளை இந்தியத் தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 9:53 pm

மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாக 152 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்ற நிலையில், தோ்தலுக்குப் பிந்தைய விதிகளை இந்தியத் தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரி ஒருவா் கூறியதாவது: வாக்குச்சாவடி கேமராக்களில் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பான எண்ம சேமிப்பக சாதனத்தை (எஸ்டி காா்டு) வாக்குப்பதிவு நிறைந்தவுடன் அகற்றக் கூடாது.

வாக்குப்பதிவு தொடா்பான தரவுகளை சேகரிக்கும் மையத்தில் கூடுதல் தோ்தல் அலுவலரின் முன்னிலையில் மட்டுமே கேமராவில் இருந்து அந்தச் சாதனத்தை நீக்க வேண்டும்.

வாக்குப்பதிவின்போது எடுக்கப்பட்ட விடியோக்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

கேமராக்கள் முழுவதுமாக அகற்றப்படும் வரை தோ்தல் ஆணைய அதிகாரிகள் அல்லது வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகள் வாக்குச்சாவடியைவிட்டு வெளியேறக் கூடாது’ என்றாா்.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் முதல்கட்டமாக 152 தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்.29-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்படுகின்றன.