நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

மேற்கு வங்கம்: வாக்களித்தார் சுவேந்து அதிகாரி!

எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி வாக்களித்தார்.

News image

வாக்குப்பதிவு - DPS

Updated On :23 ஏப்ரல் 2026, 1:38 pm IST

மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, பாஜகவின் திலீப் கோஷ், காங்கிரஸின் மௌசம் பெனசீர் நூர், திரிணமூல் காங்கிரஸின் உதயன் குஹா உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர்.

கிழக்கு மேதினிப்பூர் மாவட்டத்தில் காந்தி நகரில் உள்ள நந்தனாயக்பார் தொடக்கப்பள்ளியில், சுவேந்து அதிகாரி தனது வாக்கைச் செலுத்தினார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி, மக்கள் அமைதியான முறையில் வாக்கெடுப்பு நடைபெறுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தினார்.

திரிணமூல் காங்கிரஸ் பெரிய அளவில் குழப்பங்களை ஏற்படுத்தவில்லை. இனியும் அவர்களால் அதைச் செய்ய முடியாது. மேலோட்டமாகப் பார்க்கும்போது, ​​தேர்தல் ஆணையமும் மத்தியப் படைகளும் பாராட்டுக்குரியவர்கள் என்று அவர் கூறினார்.

மமதா பானர்ஜி மற்றும் அவரது கட்சித் தொண்டர்களின் அட்டூழியங்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்காக, பெண்கள், சநாதன ஹிந்துக்கள், பிற தேசியவாத சமூகங்கள் ஒன்றிணைந்துள்ளதால், இந்த வாக்கெடுப்பு இரட்டிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது என்று அவர் மேலும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.