மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பவானிபூர் தொகுதியில் மமதா பானர்ஜி சாலைவலம் மேற்கொண்டார்.
லான்ஸ்டவுன் கிராசிங் முதல் காளிகாட் வரை நடந்த இந்த சாலைவலத்தில், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் சென்று மக்களிடம் கலந்துரையாடி, வாக்கும் சேகரித்தார். அப்போது எத்தனை தாக்குதல்கள் நடத்தினாலும், வங்காளமே மீண்டும் வெற்றி பெறும் என்ற பாடல் அவர் பின்னணியில் ஒலிக்கப்பட்டது.
'தீதி தீதி' என்ற கோஷங்களுக்கு மத்தியில், அவர் பொதுமக்களுக்கு கை கொடுத்தும், அவர்கள் அணிவித்த மாலைகளை ஏற்றும் உற்சாகப்படுத்தினார். தனது பாதங்களைத் தொட்டு வணங்கியவர்களை அப்புறப்படுத்த முயன்ற பாதுகாப்புப் படையினரை அவர் தடுத்து நிறுத்தினார்.
இந்த சாலைவலத்தில் பாரம்பரிய மேளம் மற்றும் புருலியாவின் புகழ்பெற்ற சௌ நடனம் ஆகியவை இடம்பெற்றன. மமதாவுடன் அமைச்சர் பிர்ஹாத் ஹக்கீம் மற்றும் தெற்கு கொல்கத்தாவின் முக்கிய கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். வரும் பேரவைத் தேர்தலில் முதல்வர் மமதா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி களம் காண்கிறார்.
Summary
West Bengal Chief Minister Mamata Banerjee on Sunday led a 'padyatra' in her Bhabanipur Assembly constituency in south Kolkata, accompanied by thousands of party supporters, as the election campaign entered its final phase.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










