தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலை மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மமதா பானர்ஜி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 7) சந்தித்துப் பேசினார்.
பாஜகவை எதிர்கொள்வதைப் பற்றிய ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகலின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நாளை(ஜூன் 8) புது தில்லியில் நடைபெறுகிறது. அதில், 23 எதிர்க்கட்சிகள் பங்கேர்பது உறுதியாகியுள்ளது. இந்த சிறப்புக் கூட்டத்தில் ஒருசில காரணங்களுக்காக சில கட்சிகள் பங்கேற்கப் போவதில்லையாம்.
இதையடுத்து, இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மமதா பானர்ஜி தில்லிக்கு இன்று (ஜூன் 7) புறப்பட்டார். தில்லி சென்றிறங்கிய மமதா பானர்ஜி, அரவிந்த் கேஜரிவாலை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்துப் பேசினார்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய இரு தலைவர்களிடையேயான சந்திப்பு உத்வேகமளிப்பதாகவும் எதிர்காலத் திட்டம் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் திரிணமூல் காங்கிரஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Trinamool Congress chief Mamata Banerjee on Sunday met Aam Aadmi Party convener Arvind Kejriwal in the national capital, a day ahead of a meeting of the opposition INDIA bloc.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








