அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் வினாத் தாள்களைத் தருவதாகக் கூறி, சிலர் பணம் பறிக்கின்றனர். அத்தகைய நபர்களிடம் தேர்வுக்குத் தயாராகி வருவோர் ஏமாற வேண்டாம். ஏனெனில், வினாத்தாள் எங்கு தயாரிக்கப்படுகிறது, எங்கு அச்சடிக்கப்படுகிறது போன்ற விவரங்கள் தேர்வாணயை உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. பணம் பறிக்கும் நோக்கத்தில் சிலர் பழைய வினாத் தாள்களையே புதிதாக அச்சடித்து, ஏமாற்றிவிடுகின்றனர். இத்தகைய நபர்கள் குறித்து தேர்வாணையத்தில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.