மக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

வேலை... வேலை... வேலை... கோவை நீதிமன்றத்தில் வேலை

கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் காலியாக உள்ள கணினி ஆப்ரேட்டர், மெஷின் ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் காலியாக உள்ள கணினி ஆப்ரேட்டர், மெஷின் ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Computer Operator - 01
சம்பளம்: மாதம் ரூ.26,100 - 65,500
தகுதி: கணினி அறிவியல், கணினி அம்பிளிக்கேஷன் பாடப்பிரிவுகளில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஏ, பி.எஸ்சி., பி.காம் பட்டம் பெற்று கணினி துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சில் இளநிலை (Junior) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Xerox Machine Operator - 15
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 6 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.districts.ecourts.gov.in/coimbatore என்ற இமையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Prinicipal District Judge, Principal District Court, Combatore - 641 018.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.08.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.