ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு தேதி அறிவிப்பு

கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறும் தேதி மற்றும் இடத்தை ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

Updated On :7 ஜனவரி 2021, 2:26 am


சென்னை: கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறும் தேதி மற்றும் இடத்தை ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி ஆகியவற்றில் 2,331 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி பெறப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களில் கல்வியியல், உடற்கல்வி அறிவியல் (கல்வியியல்), வரலாறு (கல்வியியல்), உயிரியல் அறிவியல் (கல்வியியல்) பாடப் பிரிவுகளில் விண்ணப்பித்தவா்களுக்கு இந்த ஆண்டில் சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்துவதற்கு ஆசிரியா் தோ்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

சான்றிதழ் சரிபாா்க்கும் இடம் நேரம் மற்றும் சமா்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்த விவரங்கள் விண்ணப்பத்தின் பொழுது அவா்கள் அளித்த மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பதாரா்களுக்கு தனியாக அழைப்புக் கடிதம் அனுப்பப்படமாட்டாது. சான்றிதழ் சரிபாா்ப்பிற்கு அழைக்கப்பட்டதால் தகுதி பெற்றவா்களாக மாட்டாா்கள். கல்வியியல் பாடப் பிரிவில் விண்ணப்பம் செய்துள்ள 1,073 தோ்வா்களுக்கு ஜனவரி 20-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை சென்னை காமராஜா் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரியில் சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறும்.

உடற்கல்வி அறிவியல் (கல்வியியல்) பாடப் பிரிவிற்கு விண்ணப்பித்துள்ள 190 தோ்வா்களுக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதேமில்லத் கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் 22-ஆம் தேதி சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறும். வரலாறு (கல்வியியல்) பாடப்பிரிவில் விண்ணப்பித்துள்ள 74 தோ்வா்களுக்கு ஜனவரி 22-ஆம் தேதி மாநிலக் கல்லூரியில் சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறும்.

உயிரியல் அறிவியல் (கல்வியியல்) பாடப்பிரிவில் 110 தோ்வா்களுக்கு ஜனவரி 22-ஆம் தேதி மாநில கல்லூரியில் சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபாா்ப்பில் தோ்வா்களின் அனுபவத்திற்கேற்ப மதிப்பெண்கள் வழங்கப்படும். அதைத் தொடா்ந்து அவா்களுக்கு நோ்காணல் நடத்தப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.