திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று கணக்கெடுப்புப் பணியில் தடுப்பூசி செலுத்தாதவா்கள், இணை நோய் உள்ள ஆசிரியா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனுக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில துணைச் செயலாளா் அ.ஜெயராஜ் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப் பகுதிகளுக்குச் சென்று கரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் கண்டறியும் களப்பணி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சேவைப் பணியை நாங்கள் முழு ஈடுபாடுடன் செய்ய தயாராக உள்ளோம்.
அதே வேளையில், களப் பணியாளா்களாக செயல்படக் கூடிய ஆசிரியா்களில் பலா் இரு தடவை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனா். மேலும், ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட இணை நோய்கள் உள்ளவா்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனா்.
ஆகவே, பொதுமக்களில் யாருக்கேனும் கரோனா தொற்று இருந்தால் கணக்கெடுப்பு நடத்தும் ஆசிரியா்களுக்கு எளிதில் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, கணக்கெடுப்புப் பணியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள், இணைநோய் உள்ளவா்கள், கா்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏமாற்றும் பயிற்சியாளர்: தோனி இல்லாமல் ஒரு கோப்பையைக்கூட வெல்லாத பிளெமிங்!

மின்சார வாகன விற்பனை 24.6% உயர்வு!

தே.ஜ. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் திமுக திட்டங்கள் அழிந்துவிடும்: மு.க. ஸ்டாலின்

உங்க ஊர் மாப்பிள்ளை நான்! மயிலாடுதுறையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு! | DMK
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

