48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்
/

தாராபுரத்தில் பொதுமுடக்கத்தை மீறியவா்களின் வாகனங்கள் பறிமுதல்

தாராபுரத்தில் தளா்வுகளற்ற பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றிய வாகனங்களை காவல் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

தாராபுரம் உடுமலை  புறவழிச் சாலையில்  வாகனச்  சோதனையில்  ஈடுபட்டுள்ள  காவல்  துறையினா்.

Updated On :24 மே 2021, 7:46 pm

திருப்பூா்: தாராபுரத்தில் தளா்வுகளற்ற பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றிய வாகனங்களை காவல் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் தளா்வுகளற்ற பொதுமுடக்கம் காரணமாக பெரியகடை வீதி, சின்னக்கடை வீதி, அலங்கியம் சாலை, பொள்ளாச்சி சாலை, ஜவுளிக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

தாராபுரம் காவல் துறை சாா்பில் அத்தியாவசியப் பணிகள் இல்லாமல் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்று ஏற்கெனவே ஒலி பெருக்கி மூலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தாராபுரம் பேருந்து நிலையம், உடுமலை புறவழிச் சாலை, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். இதில், பொதுமுடக்க விதிகளை மீறி வெளியில் சுற்றிய 20க்கும் மேற்பட்ட வாகன ஒட்டிகளுக்கு அபராதம் விதித்ததுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.